மனிதப்புதைகுழி அகழ்வுப்பணிகள் ஆரம்பம் இன்று கொக்குத்தொடுவாயில்
சீரற்ற காலநிலை காரணமாக நேற்றைய தினம் தடைப்பட்டிருந்த கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வு பணியானது இன்று (06.09.2023) காலை 7.30 மணிக்கு ஆரம்பமாகும் என சட்ட வைத்திய அதிகாரி வாசுதேவ தெரிவித்துள்ளார்.
மேலும் கொக்குத்தொடுவாய் பகுதிக்கு நேற்று மாலை விஜயம் மேற்கொண்ட முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி த.பிரதீபன், தொல்பொருள் சிரேஸ்ட பேராசிரியர் ராஜ் சோமதேவ, முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி க.வாசுதேவ, யாழ்ப்பாணம் சட்ட வைத்திய அதிகாரி செ.பிரணவன், சட்டத்தரணிகளான ரணித்தா ஞானராசா, வி.கே.நிறஞ்சன், கொக்குளாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, தடயவியல் பொலிஸ் பொறுப்பதிகாரி மற்றும் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் உள்ளிட்ட தரப்பினர் இடத்தை (05.09.2023) பார்வையிட்டுள்ளனர்.
இதன்போது இவ்விடயம் தொடர்பாக கலந்துரையாடி அகழ்வுப்பணிகளை இன்று ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும், அகழ்வு பணிகள் எவ்வளவு காலம் இடம்பெறும் என ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு, ஏற்கனவே 13 எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த பணிகள் எப்போது நிறைவடையும் என்பது பற்றி தற்போது கூறமுடியாது. அகழ்வு பணி தொடர்ந்து நடக்கும் பட்சத்தில் எவ்வளவு காலம் நடைபெறும் என கூற முடியாது என்றும் பதிலளித்துள்ளார்.
This website uses cookies or similar technologies, to enhance your browsing experience and provide personalized recommendations. By continuing to use our website, you agree to our Privacy Policy