ராமேஸ்வரத்திற்கு நேற்று முன்தினம் மாலை வந்த சசிகலா தனியார் விடுதியில் தங்கினார். நேற்று அதிகாலை 5.40 மணியளவில் ராமநாதசுவாமி கோயிலுக்கு கட்சி பிரமுகர்கள் 200 பேருடன் வந்தார். அங்கு சுவாமி சன்னதி அருகிலுள்ள விஸ்வநாத சன்னதி முன்பு கங்கை நீர் அடங்கிய புனித நீர் கலசம் வைத்து நடத்தப்பட்ட கும்ப பூஜையில் பங்கேற்றார். 30 புரோகிதர்கள் வேதபாராயணம் முழங்க, நடந்த ருத்ரபாராயண ஜபம் மற்றும் சிறப்பு பூஜையில் பங்கேற்ற சசிகலா புனிதநீர் அடங்கிய கலசத்துடன் ராமநாதசுவாமி சன்னதிக்கு சென்றார்.
அங்கு சுவாமி தரிசனம் செய்தவர், பர்வதவர்த்தினி அம்பாள் சன்னதிக்கு சென்று அம்பாளை தரிசனம் செய்தார்.
தொடர்ந்து மகாலட்சுமி, ஆஞ்சநேயர் சன்னதியில் வழிபட்டார். காலை 7 மணிக்கு கோயிலில் இருந்து வெளியேறினார். ருத்ரபாராயண ஜப பூஜையில் பங்கேற்ற புரோகிதர்களிடம் கேட்டபோது, ‘‘எதிரிகளின் கோபத்தை தணித்து அவர்களை சாந்தமடைய செய்வதற்காக நடத்தப்படும் பூஜையே ருத்ரபாராயண ஜப பூஜை’’ என்றனர். கோவில்பட்டியில்: கோவில்பட்டியில் பிரசித்தி பெற்ற செண்பகவல்லி அம்பாள் சமேத பூவனநாத சுவாமி கோயிலுக்கு சசிகலா நேற்று காலை காரில் சென்று தரிசனம் செய்தார். பின்னர் பூவனநாத சுவாமி சன்னதிக்கு சென்று வழிபட்டார். சுமார் அரை மணி நேரத்துக்குப்பின் வெளியே வந்து காரில் மதுரை புறப்பட்டு சென்றார். அவருடன் டாக்டர் வெங்கடேஷ் உள்ளிட்டோர் வந்தனர்.
நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பொதுப்ப
வட இந்தியாவில் ஒரு இடத்தில் ஒரு தெருவில் தண்ணீர் தேங்
ஈரோடு மாவட்டம் பெருந்துறையை சேர்ந்த முன்னாள் அதிமுக அ
பாஜகவை ஆதரவாளரும் நடிகருமான ராதாரவி கோவை தெற்கு தொகுத
சென்னை பெசன்ட் நகரில் வசித்து வருபவர் நடிகை சாந்தினி.
சரியான திட்டமிடுதல் இல்லாததால் மராட்டிய அரசு 5 லட்சம்
கொரோனாவிலிருந்து தப்பிக்க அனைவரும் தடுப்பூசி செலுத்
ஜப்பானில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க உள
டிடிவி தினகரனை எதிர்த்து போட்டியிடுவேன் என்று
கொரோனாவுக்கு எதிராக உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட ஒர
மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணியா
முதல்வர் மு. க. ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசியதாக புகா
சென்னையில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் முதல்-அமைச்சர்
முதல்- அமைச்சர்
தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 74-வது நினைவு தினம் இன்று
