தமிழகத்தில் கொரோனா முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்தது. அதன்படி சென்னையில் சட்டம் ஒழுங்கு காவல் துறையினர் 200 இடங்களில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அதேபோல் போக்குவரத்து காவல்துறையினர் 118 இடங்களிலும் தணிக்கை மேற்கொண்டனர்.
அதன்படி நேற்று தேவையின்றி வெளியேறியதாக ஆயிரத்து 110 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அத்துடன் இது தொடர்பாக 169 இருசக்கர வாகனங்கள், 6 ஆட்டோக்கள் மற்றும் 11 இலகு ரக வாகனங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
அதேபோல் சட்டம் ஒழுங்கு பிரிவு காவல்துறையினர் நடத்திய சோதனையில் 641 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அத்துடன் 969 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது முக கவசம் அணியாமல் சென்றது தொடர்பாக 1,346 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அதேபோல் தனிமனித இடைவெளியை கடைப் பிடிக்கவில்லை என்ற குற்றத்திற்காக 83 வழக்குகளும் , குறிப்பிட்ட நேரத்தை தாண்டி கடைகளை திறந்து வைப்பதற்காக 64 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டது.
சென்னையில் ஊரடங்கு விதிகளை மீறி பலரும் பைக்குகளில் சுற்றித் திரிந்ததால் இன்றுமுதல் ட்ரோன்கள் மூலம் ஊரடங்கு விதிமுறைகளை மீறுபவர்கள் கண்காணித்து நடவடிக்கை எடுக்க சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே நீண்ட காலமாக எல்ல
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் பஞ்சாயத்து யூனியனுக்
சவுதி அரேபிய வெளியுறவுத்துறை மந்திரி பைசல் பின் பர்ஹா
கொரோனா பெருந்தொற்று காரணமாக நாடு முழுவதும் கட்டுப்பா
கரூரில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி வீட்டில் வர
தேனி மாவட்டம் கம்பம் மெட்டு எல்லையில் உள்ள சோதனைச்சாட
கடலூர் மாவட்டத்தில் விருத்தாசலம் சித்தூர் ஆகிய ஊர்
அரசியல் கட்சிகள் வாக்குக்கு வழங்கும் பரிசுப் பொருட்க
கேரள மாநிலம் கண்ணூர் மாதமங்கலம் பகுதியில் உள்ள ஒரு தன
தமிழகத்தில் நடைமுறையில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங
காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன
மத்திய அரசிடம் இருந்து பெறப்பட்ட 3.65 லட்சம் கோவிஷீல்டு
மக்கள் பிரதிநிதிகளுக்கு தடுப்பூசி போட மத்திய அரசு அனு
இந்தியாவில் 2020-ம் ஆண்டில் கொரோனா தொற்று பாதிப்பு தொடங
