துபாயில் எக்ஸ்போ 2020 உலக கண்காட்சி இன்று தொடங்கியது. அடுத்த ஆண்டு மார்ச் 31-ந்தேதி வரை தொடர்ச்சியாக பல்வேறு சிறப்பம்சங்களுடன் இந்த கண்காட்சி நடைபெறுகிறது. அமீரகம், இந்தியா உள்பட 192 நாடுகள் இந்த கண்காட்சியில் பங்கேற்கின்றன.
ஒவ்வொரு நாடுகளும் பிரத்யேக அரங்கங்கள் அமைத்துள்ளது. தொழில்நுட்பங்கள், கலை, இசை மற்றும் பாரம்பரிய நிகழ்ச்சிகள் என சிறப்பம்சங்களுடன் தினமும் இந்த கண்காட்சி நடைபெற உள்ளது.
இந்தியா அமைத்துள்ள அரங்கில் கூடியிருந்தவர்களின் பிரதமர் மோடி வீடியோ கான்பரன்ஸ் மூலம் பேசினார். அப்போது ‘‘வர்த்தகம் செய்வதற்கு ஏற்ற நாடாக இந்தியா விளங்குவதுடன் அதிகபட்ச வளர்ச்சியையும் அளிக்கிறது. இங்கு முதலீடுகள் செய்ய அனைவரையும் திறந்த மனதுடன் வரவேற்கிறோம்.
இந்தியாவில் முதலீடு செய்வதன் வாயிலாக எங்கள் வளர்ச்சியில் நீங்களும் இணைய அழைக்கிறோம். இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் என நான் ஏன் அழைக்கிறேன் என்றால், இந்தியா வாய்ப்புகளுக்கான நிலமாக விளங்குகிறது. கலை, வணிகம் தொழில் அல்லது கல்வித்துறையாக இருந்தாலும் சரி. கண்டுபிடிப்புக்கான வாய்ப்பு, கூட்டாளருக்கான வாய்ப்பு, முன்னேறுவதற்கான வாய்ப்பு உள்ளது’’ என முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்தார்.
இந்திய விமானப் படைக்குச் சொந்தமான விமானம் ஒன்று நேற்ற
ஐரோப்பிய ஆணைய தலைவர் ஏப்ரல் 24 மற்றும் 25ம் தேதிகளில் இந்
புதிய நிதியாண்டு முதல் 3 இலவச கியாஸ் சிலிண்டர் விநியோக
உடல்நலக்குறைவால் மறைந்த
அண்ணாவின் 113-வது பிறந்த நாளை முன்னிட்டு, அண்ணாசாலையில் 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க, தேசிய கீதம் இசைக்க, மூவர கொரோனா பரவலுக்கு பிறகு முதல்முறையாக பிரதமர் மோடி இன்ற தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் புதிதாக அமைக்கப்பட நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலின் போது திமுக மக்களை க நேற்று ஏபிவிபி அமைப்பின் முன்னாள் தேசிய தலைவருமான சண் ஒன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து தற்கொலை செய்பவர் மத்திய அரசின் மிக முக்கியமான சுகாதார திட்டமான, ஆயுஷ்ம தேர்தல் வியூகங்களை வகுப்பதில் வல்லுனராக கருதப்படுபவ இலங்கை தமிழர்கள் குறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டா
