துபாயில் எக்ஸ்போ 2020 உலக கண்காட்சி இன்று தொடங்கியது. அடுத்த ஆண்டு மார்ச் 31-ந்தேதி வரை தொடர்ச்சியாக பல்வேறு சிறப்பம்சங்களுடன் இந்த கண்காட்சி நடைபெறுகிறது. அமீரகம், இந்தியா உள்பட 192 நாடுகள் இந்த கண்காட்சியில் பங்கேற்கின்றன.
ஒவ்வொரு நாடுகளும் பிரத்யேக அரங்கங்கள் அமைத்துள்ளது. தொழில்நுட்பங்கள், கலை, இசை மற்றும் பாரம்பரிய நிகழ்ச்சிகள் என சிறப்பம்சங்களுடன் தினமும் இந்த கண்காட்சி நடைபெற உள்ளது.
இந்தியா அமைத்துள்ள அரங்கில் கூடியிருந்தவர்களின் பிரதமர் மோடி வீடியோ கான்பரன்ஸ் மூலம் பேசினார். அப்போது ‘‘வர்த்தகம் செய்வதற்கு ஏற்ற நாடாக இந்தியா விளங்குவதுடன் அதிகபட்ச வளர்ச்சியையும் அளிக்கிறது. இங்கு முதலீடுகள் செய்ய அனைவரையும் திறந்த மனதுடன் வரவேற்கிறோம்.
இந்தியாவில் முதலீடு செய்வதன் வாயிலாக எங்கள் வளர்ச்சியில் நீங்களும் இணைய அழைக்கிறோம். இந்தியாவில் முதலீடு செய்யுங்கள் என நான் ஏன் அழைக்கிறேன் என்றால், இந்தியா வாய்ப்புகளுக்கான நிலமாக விளங்குகிறது. கலை, வணிகம் தொழில் அல்லது கல்வித்துறையாக இருந்தாலும் சரி. கண்டுபிடிப்புக்கான வாய்ப்பு, கூட்டாளருக்கான வாய்ப்பு, முன்னேறுவதற்கான வாய்ப்பு உள்ளது’’ என முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்தார்.
அகில உலகத்துக்கு இந்தியா வழங்கிய பெருங்கொடைகளில் முக
ஸ்ரீராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்திர அறக்கட்டளையின் மது
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் பல சர்ச்சைகள் வ
மேற்கு வாங்க மாநிலம், வடக்கு பர்கானாஸைச் சேர்ந்த 11 வயத
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் பஞ்சாயத்து யூனியனுக்
இந்தியாவின் புனே நகரில் உள்ள ஜேர்மன் வெதுப்பகம் மீத
வெள்ளை அறிக்கை என்ற பெயரில் வெற்று அறிக்கையை வெளியிட்
தமிழக தேர்தல் களம் உச்சக்கட்ட பரபரப்பை நெருங்கிவருகி
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய சுகாதாரம் மற்ற
விவசாயிகளின் போராட்டம் தொடர்பாக தவறான தகவல்களை பரப்ப
பெண் ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு உச்சத் தை அ
அதிமுக கூட்டணியில் பாமக, பாஜக ஆகியவற்றுக்கான தொகுதிப்
தென்னாப்பிரிக்கா மற்றும் நமிபியாவில் இருந்து மேலும்
