ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் போகோஹரம் உள்பட பல்வேறு பயங்கரவாத அமைப்புகள் கடும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இந்த பயங்கரவாதிகள் பொதுமக்களைக் கடத்தி அவர்களை பிணைக்கைதிகளாக வைத்துக்கொண்டு அரசை மிரட்டி தங்களுக்கு தேவையான காரியத்தை சாதித்துக் கொள்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
அந்த வகையில், நைஜீரியாவின் வடமேற்கு பகுதியில் உள்ள ஜம்பாரா மாகாணத்தில் கடந்த 4 மாதங்களுக்கு முன் பெண்கள், சிறுவர்கள் உள்பட 180-க்கும் மேற்பட்டோரை பயங்கரவாதிகள் கடத்திச் சென்றனர்.
இதற்கிடையே, அவர்களை பத்திரமாக மீட்க பயங்கரவாதிகளுடன் மாநில அரசு தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. ஆனாலும் பயங்கரவாதிகள் அவர்களை விடுவிக்காமல் இருந்து வந்தனர்.
இந்நிலையில், பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட அப்பாவி மக்கள் சிபிரி வனப்பகுதிக்குள் பிடித்து வைக்கப்பட்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் 100-க்கும் மேற்பட்ட அதிரடி படை போலீசார் சிபிரி வனப்பகுதிக்குள் அதிரடியாக நுழைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
போலீசாரைக் கண்டதும் மக்களை சிறைப்பிடித்து வைத்திருந்த பயங்கரவாதிகள் அங்கிருந்து தப்பி ஓடினர். இதையடுத்து, பிணைக்கைதிகளாக இருந்த 187 பேரை போலீசார் பத்திரமாக மீட்டனர்.
கொரோனா வைரஸ் உலகமெங்கும் பரவி இருந்த வேலையில், சீனாவி
உக்ரைனின் மரியுபோல் நகரம் இன்று அதிகாலைக்குள் முழுவத
ஈராக்கின் தெற்கு நகரமான நாசிரியாவில் உள்ள கொரோனா மருத
சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நா
இந்தியாவுக்கான ஜெர்மனி தூதர் வால்டர் ஜெ லிண்டர் நேற்ற
டெல் அவிவில் உள்ள பிரித்தானிய தூதரகத்தை புனித நகரமான
மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் ஐ.எஸ், அல்கொய்தா,
செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக அமெரிக்க விண்வெள
நியூசிலாந்து நாட்டின் ஆக்லாந்து நகரில் உள்ள சூப்பர் ம
கடந்த ஜனவரி 15ஆம் திகதி வரை, நோய்த்தடுப்பு மருந்துகளைத்
அமெரிக்காவை சேர்ந்த தனியார் விண்வெளி நிறுவனமான &
கம்யூனிஸ்ட் நாடான ரஷ்யாவின் அதிபராக விளாடிமிர் புடின
உக்ரைன் மற்றும் ரஷ்யாவிற்கு இடையிலான போர் தொடர்ந்து 13
பிரித்தானிய பிரதமர் பதவிக்கான தேர்தல் போட்டியிலிருந
சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்குடன் தொடர்ச்சியாக இரண்டு மணி