தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் தமன்னா. இவர் தெலுங்கு தொலைக்காட்சியில் மாஸ்டர் செப் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ஒப்பந்தம் செய்துவிட்டு திடீரென்று நீக்கிவிட்டனர். இதனால் அதிர்ச்சியான தமன்னா நிகழ்ச்சி தயாரிப்பாளர்களுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். அதில் தன்னை திடீரென்று நீக்கியது தவறு என்றும், தனக்கு சம்பள பாக்கி உள்ளது என்றும் குறிப்பிட்டு உள்ளார்.
இந்நிலையில் தமன்னா புகாருக்கு எதிராக நிகழ்ச்சி தயாரிப்பு நிறுவனம் பெங்களூருவில் உள்ள கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது. அந்த நிறுவனம் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘‘மாஸ்டர் செப் நிகழ்ச்சிக்காக தமன்னாவை 18 நாட்கள் படப்பிடிப்பில் பங்கேற்க ரூ.2 கோடி சம்பளம் பேசி ஒப்பந்தம் செய்தோம். ஆனால் அவர் 16 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பில் பங்கேற்றார். தமன்னாவுக்கு ரூ.1 கோடியே 50 லட்சம் சம்பளம் கொடுத்து விட்டோம்.
ஆனால் வேறு பணிகளுக்கு சென்று எங்கள் படப்பிடிப்பில் பங்கேற்க தமன்னா தாமதம் செய்ததால் ரூ.5 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டது. ஆனால் தமன்னா எங்கள் மீது உண்மைக்கு மாறான தகவலை கூறியுள்ளார். விடுபட்ட இறுதிகட்ட படப்பிடிப்பையும் அவர் முடித்து கொடுத்தால் மீதி பணத்தையும் கொடுக்க தயாராக இருக்கிறோம்” என்று கூறியுள்ளனர்.

நடிகர் அஜித் நடிப்பில் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தி
நடிகை ரெஜினா நடிப்பில் உருவாகும் ‘சூர்ப்பனகை’ டிர
எங்க ஊரு பாட்டுக்காரன்’ படத்தின் மூலம் தமிழ் திரையு
விஜய்யின் பீஸ்ட் படம் ரிலீஸ் ஆன நேரத்தில் அதை யோகி பாப
தமிழ் சினிமாவில் இளம் நடிகராக வலம் வருபவர் அதர்வா முர
நடிகர் கார்த்தி தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந
பிரபல இயக்குனர் கௌதம் மேனன் இயக்கி நடித்துள்ள ஆந்தாலஜ
சின்னத்திர
பிக் பாஸ் சீசன் 5 மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர
தமிழ் திரையுலகில் 1980-களில் முன்னணி கதாநாயகியாக வலம் வந
நடிகர் விவேக் தமிழ் சினிமாவில் காமெடியனாக இருந்து தனக
வெப் தொடர்களுக்கு சமீப காலமாக ரசிகர்கள் மத்தியில் வரவ
விஜய் தற்போது வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இதில
இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் கதாநாயகனாக நட
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை
