தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் தமன்னா. இவர் தெலுங்கு தொலைக்காட்சியில் மாஸ்டர் செப் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ஒப்பந்தம் செய்துவிட்டு திடீரென்று நீக்கிவிட்டனர். இதனால் அதிர்ச்சியான தமன்னா நிகழ்ச்சி தயாரிப்பாளர்களுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். அதில் தன்னை திடீரென்று நீக்கியது தவறு என்றும், தனக்கு சம்பள பாக்கி உள்ளது என்றும் குறிப்பிட்டு உள்ளார்.
இந்நிலையில் தமன்னா புகாருக்கு எதிராக நிகழ்ச்சி தயாரிப்பு நிறுவனம் பெங்களூருவில் உள்ள கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது. அந்த நிறுவனம் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘‘மாஸ்டர் செப் நிகழ்ச்சிக்காக தமன்னாவை 18 நாட்கள் படப்பிடிப்பில் பங்கேற்க ரூ.2 கோடி சம்பளம் பேசி ஒப்பந்தம் செய்தோம். ஆனால் அவர் 16 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பில் பங்கேற்றார். தமன்னாவுக்கு ரூ.1 கோடியே 50 லட்சம் சம்பளம் கொடுத்து விட்டோம்.
ஆனால் வேறு பணிகளுக்கு சென்று எங்கள் படப்பிடிப்பில் பங்கேற்க தமன்னா தாமதம் செய்ததால் ரூ.5 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டது. ஆனால் தமன்னா எங்கள் மீது உண்மைக்கு மாறான தகவலை கூறியுள்ளார். விடுபட்ட இறுதிகட்ட படப்பிடிப்பையும் அவர் முடித்து கொடுத்தால் மீதி பணத்தையும் கொடுக்க தயாராக இருக்கிறோம்” என்று கூறியுள்ளனர்.

விஜய் நடிப்பில் உருவாகும் ‘தளபதி 65’ படத்தை நெல்சன்
பசங்க, களவாணி படங்களில் நடித்து பலருடைய கவனத்தை ஈர்த்
என்னதான் தொலைக்காட்சிகளில் பல சீரியல்களை ஒளிப்பரப்ப
பிக்பொஸ் சீசன் – 4இன் வெற்றியாளர் ஆரி அர்ஜுனன், பிக்ப
சூர்யா நடிப்பில் உருவாகி உள்ள ‘ஜெய் பீம்’ திரைப்பட
தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களாக பார்க்கப்படு
வாரணம் ஆயிரம் படத்தில் மேக்னாவாக தமிழ் ரசிகர்களின் மன
நடிகை யாஷிகா ஆனந்த் கார் விபத்தில் படுகாயம் அடைந்து ம
சூது கவ்வும், தெகிடி படங்களின் மூலம் பிரபலமான அசோக் செ
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் சமீபத்தில் நடந்து முடிந
தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ப
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வ
தமிழில் தனித்துவமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வர
கடந்த வருடம் டிசம்பர் 9ம் தேதி தூக்குப்போட்டு தற்கொலை
பிக்பொஸ் நிகழ்ச்சியின் 4ஆவது சீசனில் போட்டியாளராக கலந
