தமிழில் தனித்துவமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் விஷ்ணு விஷால். இவர் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள திரைப்படம் ‘எப்.ஐ.ஆர்’. அறிமுக இயக்குனர் மனு ஆனந்த் இயக்கும் இப்படத்தில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக மஞ்சிமா மோகன், ரைசா வில்சன், ரெபா மோனிகா ஜான் ஆகிய 3 ஹீரோயின்கள் நடித்துள்ளனர்.
இயக்குனர் கவுதம் மேனன் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அஷ்வந்த் இசையமைத்துள்ள இப்படத்திற்கு, கிருமி பட புகழ் அருள் வின்செண்ட் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனிடையே இப்படம் நேரடியாக ஓடிடி-யில் வெளியிடப்பட உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வந்தது.
இந்நிலையில், இதுகுறித்து விளக்கமளித்துள்ள நடிகர் விஷ்ணு விஷால், டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: “இது தவறான செய்தி. விரைவில் இப்படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும். ஒரு தயாரிப்பாளராகவும், நடிகராகவும், நான் இந்த படத்தை திரையரங்கில் வெளியிடவே விரும்புகிறன். சிறந்த திரையரங்க அனுபவத்தை கொடுக்கும் விதமாக இப்படத்தை உருவாக்கி இருக்கிறோம்” என அவர் கூறியுள்ளார்.

தமிழ், தெலுங்கு மொழி படங்களில் நடித்து பிரபல நடிகையாக
இயக்குனர் ஷங்கரிடம் இணை இயக்குனராக பணியாற்றி ஆல்பம் த
தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனும் நடிகருமான நாகச
நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உரு
தமிழ் சினிமாவில் நடன இயக்குனராக இருப்பவர் சாண்டி மாஸ்
குற்றம் 23’ படத்தை அடுத்து அருண் விஜய்யும், இயக்குனர்
சூர்யா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான திரைப்படம்
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள படம
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் நடிகர்
அருண்விஜய்யின் 33-வது படத்தை இயக்குனர் ஹரி இயக்கி வருகி
சினிமா நடிகர்கள் பற்றி அவதூறு கருத்துக்களை பரப்பி வரு
தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை பிடித்தவர் தான் ப
சினிமா துறையினர் பாலியல் வழக்குகளில் சிக்குவது. தொடர்
கேஜிஎஃப் இயக்குநர் பிரஷாந்த் நீலுடன் பிரபாஸ் இணையும்
நடிகர் அஜித்தின் மகள் மற்றும் மகன் புகைப்படங்கள்
