இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் எரிக் லாவெரடுவுக்கும், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானின் அமைச்சு அலுவலகத்தில் இடம்பெற்றது.
தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் ஊடாக முன்னெடுக்கப்படும் வீடமைப்பு திட்டத்துக்கு இதன்போது பிரான்ஸ் தூதுவர் பாராட்டுத் தெரிவித்துள்ளார் என்று இராஜாங்க அமைச்சரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அதேநேரத்தில் அமைச்சின் கீழ் இயங்கும் பிரஜாசக்தி செயற்திட்டத்தினூடாகவும், அமைச்சின் ஊடாகவும் சிறு நடுத்தர பால் உற்பத்தியாளர்களை ஊக்குவிப்பதற்கும் அமைச்சரின் பரிந்துரைக்கு அமைய பிரஜாசக்தி செயற்திட்டத்தின் பணிப்பாளர் செயற்றிட்ட அறிக்கை கையளித்துள்ளார்.
இதன்மூலம் பெருந்தோட்டப் பகுதிகளில் உள்ள சிறு நடுத்தர உற்பத்தியாளர்களை ஊக்குவிப்பதோடு சுற்றுலா மற்றும் முதலீட்டு துறைக்கு பிரான்ஸ் அரசு நேரடிப் பங்களிப்பை வழங்கும் என்று பிரான்ஸ் தூதுவர் உறுதியளித்துள்ளார்.
இந்தச் சந்திப்பில் அமைச்சின் செயலாளர் டி.பி.ஜீ, குமாரசிறி, பிரதமரின் இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான், இராஜாங்க அமைச்சரின் பிரத்தியோக செயலாளர் மொஹமட் காதர், பிரஜாசக்தி செயற்திட்டத்தின் பணிப்பாளர் பாரத் அருள்சாமி, இ.தொ.காவின் கொழும்பு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ரகு இந்திரகுமார் மற்றும் தூதரக அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
பெரும்போகத்திற்கு தேவையான யூரியா உரங்களை விவசாயிகளு
இலங்கையில் இடம் பெற்ற யுத்த காலத்தில் சர்வதேசத்தால் த
பொதுநலவாய நாடுகளின் நிதி அமைச்சர்களுடன் இலங்கை பிரதி
11.6 மில்லியன் ரூபா நிதியில் புதிதாக கட்டப்பட்ட வட்டுக்
சிவனொளிபாத மலையை தரிசனம் செய்து விட்டு வீடு திரும் ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு எதிராக நிறைவேற் மக்களின் ஜனநாயக உரிமைக்கு புறம்பாக அரசாங்கம் செயற்பட இலங்கையில் கடந்த காலங்களில் கொல்லப்பட்ட மற்றும் காணா நாள்தோறும் இலங்கையில் ஏதாவதொரு பொருளின் விலை பாரியளவ கொரோனா தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறினார் என்ற குற்றச திருகோணமலை - மூதூர், பட்டித்திடல் பகுதியில் இடம்பெற்ற இலங்கை சர்வதேச பிணையங்களுக்கான கொடுப்பனவைச் செலுத்த மட்டக்களப்பு வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் வாழும் மக அரசியல் கைதிகள் விடயம் தொடர்பில் அமைச்சர் நாமலின் கரு
