ஸ்ரீ தலதா மாளிகை வளாகத்தின், அதி உயர் பாதுகாப்பு வலயமாக கருதப்படும் பகுதிகளை ட்ரோன் கமரா கொண்டு காணொளி படம் எடுத்த பங்களாதேஷ் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று காலை 8.30 மணியளவில் அவர் கைது செய்யப்பட்டதாக தளதா மாளிகை காவல்துறையினர் தெரிவித்தனர்.
தலதா மாளிகை வளாகத்தில் அனுமதியின்றி ட்ரோன் கமரா பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ள நிலையில் அவரை கைது செய்ததாகவும், தனது வலையொளி அலைவரிசைக்காக அந்த காணொளிகளை எடுத்ததாகவும் பங்களாதேஷ் பிரஜை காவல்துறை விசாரணைகளில் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட நபரின் ட்ரோன் கமரா, தொலைபேசி, கடவுச் சீட்டு உள்ளிட்டவற்றை பொறுப்பேற்றுள்ள காவல்துறையினர், விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கண்டி சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சர் சமில் ரத்நாயக்கவின் ஆலோசனைக்கு அமைய, சுற்றுலா காவல்துறை பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான காவல்துறை பரிசோதகர் இத்தமல்கொட தலைமையிலான காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இலங்கை கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் வனிது
2019 ஆம் ஆண்டு ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்ட வன்முறை மற்று
2022 ஆம் ஆண்டுக்கான இலங்கை- இந்திய சர்வதேச பரோ குத்துச்சண
இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் கடந்த சில தினங்க
யாழ்ப்பாணம் – வேலணை பகுதியில் அமைக்கப்படவுள்ள நவீன
கொரோனா தொற்று பரவலையடுத்து நாட்டின் பல பகுதிகளில் தனி
விஞ்ஞான ஆய்வுக்கான மிக உயர்ந்த ஜனாதிபதி விருது தமிழரா
ஹிஸ்டெரியா எனப்படும் நோய் அறிகுறியுடைய 15 வயதுடைய சி
எதிர்காலத்தில் மலேசிய வேலைவாய்ப்புக்களுக்கு மலையகத்
2023 ஆம் ஆண்டின் முதல் சில மாதங்களில், மருத்துவ உதவிக்காக
அவப்பெயருடனும் அழிவுடனும் கோட்டாபய அரசு நிறைவுக்கு வ
பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அழைப்பினை ஏற்று இரண
இலங்கைக்கு முன்னைய அமர்வுகளில் வழங்கிய வாக்குறுதிகள
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிண்ணையடி பகுதிய
மாகாண சபைத் தேர்தலுக்கு முகங்கொடுப்பதற்கு ஐக்கிய மக்
