மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நாட்டில் புதிதாக 11,451 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் அதிகபட்சமாக கேரளாவில் 7,124 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. மொத்தபாதிப்பு 3 கோடியே 43 லட்சத்து 66 ஆயிரத்து 987 ஆக உயர்ந்துள்ளது.
கேரளாவில் 201 பேர் உள்பட நாடுமுழுவதும் மேலும் 266 பேர் இறந்துள்ளளர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 4,61,057 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா புதிய பாதிப்பை விட அதன் பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை நேற்றும் அதிகமாக இருந்தது. அந்த வகையில் நேற்று 13,204 பேர் நலம் பெற்று வீடு திரும்பினர். இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 3 கோடியே 37 லட்சத்து 63 ஆயிரத்து 104 ஆக அதிகரித்துள்ளது.
தற்போது 1,42,826 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது கடந்த 262 நாட்களில் இல்லாத அளவில் குறைவாகும்.
நாடு முழுவதும் நேற்று 23,84,096 டோஸ்களும், இதுவரை 108 கோடியே 47 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது.
இதற்கிடையே நேற்று 8,70,058 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. இதுவரை 61.60 கோடி மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
பீகார் மாநிலத்தின் முங்கர் மாவட்டத்தில் உள்ள கொத்வான
உடல்நலக்குறைவால் மறைந்த
மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டி ஜப்பான் பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக இலங்கையுடனான கடல் எல்லைக்கு அருகில் உள்ள பாக்கு நீரிண ஜப்பானில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க உள இந்தியாவில் கடந்த ஜனவரி 16-ந்தேதி முதல் கொரோனாவுக்கு எத மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெறக்க தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான விஐபி தொகுதிகளுள் ஒன்ற இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை மிகவும் வேக தமிழகத்தில் இனி நிரந்தர ஆட்சியாக திமுக ஆட்சி அமைந்திட தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையால் பல மாவட்டங்களில் க அரிய வகை மரபணு நோயால் பாதிக்கப்பட்ட சிறுமி மித்ராவின் தமிழக சட்டசபை பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நாளை கூட
