More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • கடந்த இரண்டு மாதங்களாக கல்குவாரி உரிமையாளர்களுக்கு வழங்கப்படும் பர்மிட் முறையில் மாற்றம்!
கடந்த இரண்டு மாதங்களாக கல்குவாரி உரிமையாளர்களுக்கு வழங்கப்படும் பர்மிட் முறையில் மாற்றம்!
Dec 14
கடந்த இரண்டு மாதங்களாக கல்குவாரி உரிமையாளர்களுக்கு வழங்கப்படும் பர்மிட் முறையில் மாற்றம்!

 



கல் குவாரிகளில் அனுமதி வழங்குவதில் உள்ள முறைகேடுகளை களைய வேண்டும் என்று எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். 



அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், " கடந்த இரண்டு மாதங்களாக கல்குவாரி உரிமையாளர்களுக்கு வழங்கப்படும் பர்மிட் முறையில் மாற்றம் செய்யப்பட்டது. உதாரணமாக ஆண்டுக்கு சுமார் 12,000 யூனிட் ஜல்லி உற்பத்தி செய்யப்படும் என்று கூறி குவாரி நடத்த அனுமதி பெற்றவர்கள் , அந்த வருடத்திற்கான மொத்த உற்பத்தியை 12 மாதங்களுக்கு சமமாகப் பிரித்து மாதத்திற்கு ஆயிரம் யூனிட் சதவீதம் உற்பத்தி செய்ய வேண்டும் என்று புதிய விதியினை உதவி இயக்குனர் மூலமாக தமிழக அரசு தங்கள் மீது திணிப்பதாகக  கல் குவாரி உரிமையாளர்கள் கூறுகின்றனர்.



மேலும் 15 நாட்கள் அல்லது ஒரு மாதத்துக்கு ஒருமுறை வழங்கப்பட்டு வந்த பர்மிட் முறை தற்போது மூன்று நாட்களுக்கு ஒரு முறை என்று மாற்றப்பட்டுள்ளதாகவும், கல்குவாரி உரிமையாளர்கள் கூறுகின்றனர். இதனால் மூன்று நாட்களுக்கு ஒருமுறை ஜல்லி உற்பத்தியாளர்கள் உதவி இயக்குனர் அலுவலகத்திற்கு செல்ல வேண்டியுள்ளது . தேவையான அனுமதியை பெற ஒருநாள் முழுமையாக செலவாகிறது என்று ஜல்லி உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவிக்கிறது.  இதனால் மூன்று நாட்களுக்கு பர்மிட் வாங்கினாலும் மீதமுள்ள இரண்டு நாட்களுக்கு மட்டுமே கட்டுமான பணிகளுக்கு ஜல்லியை உற்பத்தி செய்யவும் வாகனங்களில் கொண்டு செல்லவும் இயலும் இவ்வாறு முறைப்படி கல்குவாரி நடத்துவதற்கு அனுமதி வாங்கி உற்பத்தி செய்பவர்கள் இந்த அரசு இவ்வாறு கெடுபிடிகள் செய்கிறது.



50 சதவிகிதத்துக்கு மேல் காலாவதியான கல்குவாரிகள் எந்தவிதமான பர்மிட்டும் இல்லாமல்  கவனிக்க வேண்டிய ஆளும் கட்சியினரை கவனித்துவிட்டு,  ஜல்லி வியாபாரத்தில் கொடிகட்டிப் பறப்பதாக சங்கத்தினர் தெரிவிக்கின்றனர் . இதனால் அரசுக்கு வர வேண்டிய வருவாய் முழுவதும் எங்கே போகிறது என்று நான் மக்களுக்கு விளக்க வேண்டியதில்லை. கரூர் ,புதுக்கோட்டை, விருதுநகர் ,தேனி, திண்டுக்கல் போன்ற ஒரு சில மாவட்டங்களில் இது போன்ற நிகழ்வுகள் அதிகமாக நடைபெறுகிறது என்று கல் குவாரி உரிமையாளர்கள் கூறுகின்றனர்.



 இதுபோன்று விதிகளுக்குப் புறம்பாக கல் குவாரிகள் நடத்துபவர்கள் விதிகளின் படி செயல்படும் குவாரிகள் , விதிகளை மீறி செயல்படுகிறார்கள் என்று அரசுக்கு மொட்ட பெட்டிஷன் போட்டு தேவையின்றி மூடு முயற்சிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர் என்று கல்குவாரி உற்பத்தியாளர்கள் சங்க உறுப்பினர்கள் புகார் தெரிவிக்கின்றனர். எனவே இந்த அரசு உடனடியாக மூன்று நாட்களுக்கு ஒருமுறை பர்மிட் வழங்கப்படும் என்ற புதிய நடைமுறையை மாற்றி பழையபடி 15 நாட்களுக்கு ஒரு முறையோ அல்லது மாதத்திற்கு ஒரு முறையோ பர்மிட் வழங்க வேண்டும் என்றும் குவாரிகளில் எந்தவிதமான பர்மிட்டும்  பெறாமல் ஜல்லி உற்பத்தி செய்து விற்பனை செய்வதை அனுமதிக்கும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதிமுக அரசில் எப்படி கல் குவாரிகளில் வருவாய் முழுமையாக அரசின் கருவூலத்திற்கு சென்று அடைந்ததோ,  அதன்படி இப்போதும் கல்குவாரிகள் மூலம் வரவேண்டிய வருவாய் முழுவதும் அரசின் கருவூலத்தில் சென்றடைவதை இந்த விடியா  அரசு உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jun03

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்

Jan24

பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் தம்பி மகளான நிஹார

Jan26

இந்தியாவில் கன்னியாகுமரி மாவட்டம் கடியப்பட்டணம் அரு

Jul24

வணிகவரி மற்றும் பதிவுத்துறையில் பொதுமக்களின் புகார்

Jan31

ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் லெல்ஹார் பகுத

Jun26

2021-22 கல்வியாண்டு முதல் M.Phil படிப்பு ரத்து செய்யப்படுவதாக&n

May07

தமிழக சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் புதிய அறிவிப

Mar18

பிரச்சாரத்தில் பழக்க தோஷத்தில் தங்க தமிழ்ச்செல்வம் இ

Apr27

இந்தியாவில் பெருகி வரும் ஆக்சிஜன் தேவையை சமாளிப்பதற்

Jul14

ஈரோடு மாவட்டத்தில் இதுவரை 11 லட்சம் பேருக்கு கொரோனா பரி

Dec29

மக்களவை தேர்தலில் பாஜவை வீழ்த்த, காங்கிரசை உள்ளடக்கிய

Oct18

இந்தியாவில் பல மாநிலங்களில் தேசிய புலனாய்வு அமைப்பின

Jun09

  இந்தியாவின் உத்தர்ப்பிரதேசம் லக்னோவைச் சேர்ந்த 16 வ

Feb02

தங்கத்தின் விலையானது அன்றாடம் ஏற்றம் இறக்கம் கண்டு வர

Jun29

கர்நாடகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளி, கல்லூரிகள்

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jan 15 (22:37 pm )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jan 15 (22:37 pm )
Testing centres