சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்த 21வயது பெண் கிண்டியில் உள்ள கல்வி நிறுவனத்தில் படித்து வருகிறார். இவர் கடந்த 13ம் தேதி மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதையடுத்து மாணவியின் அலறல் சத்தம் கேட்டு அவரது பெற்றோர் ஓடி வந்து பார்க்கையில் மாணவி ரத்தவெள்ளத்தில் கிடந்ததுடன் , தனது அருகில் பிறந்த பச்சிளம் குழந்தை ஒன்று கிடந்துள்ளது. இதையடுத்து உடனடியாக குழந்தை மற்றும் மாணவியை மீட்ட பெற்றோர் கோடம்பாக்கத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
ஆனால் குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். அத்துடன் மாணவியை மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்த விசாரணையில் மாணவி செங்கல்பட்டு பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை காதலித்து வந்ததாகவும், அதன் காரணமாக அவர் கர்ப்பம் தரித்துள்ளார். இருப்பினும் காதலன் திருமணம் செய்து கொள்ள மறுப்பு தெரிவித்ததன் காரணமாக மாணவி தற்கொலைக்கு முயன்றது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர்.
சென்னை கோடம்பாக்கத்தில் கடந்த 13ஆம் தேதி மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்று கர்ப்பிணி மாணவி இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மாணவிக்கு ஆண் குழந்தை பிறந்து அங்கேயே இறந்தது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஸ்டிரா மாநிலம், நாசிக்கில் உள்ள மருத்துவமனை ஒன்ற
இந்தியாவில் கொரோனா வைரசின் 2ம் அலையின் தாக்கத்தை சமாள
தமிழகத்தில் இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில
உத்தரபிரதேசம் மற்றும் பீகார் மாநிலங்களில் கொரோனாவால
பிரதமர் நரேந்திர மோடியின் 71-வது பிறந்த நாள் கொண்டாடப்ப
நீட் தேர்வு பற்றிய ஆய்வு குழுவுக்கு எதிராக அரசியல் உள
பெங்களூரு பத்மநாபநகரில் ஏழை மக்களுக்கு உணவு பொருட்கள
மருத்துவமனைகளில் நேற்று கொரோனா ஒத்திகை நடந்தது. டெல
நேபாள பிரதமர் ஷேர் பகதூர் தியூபா 3 நாள் பயணமாக இந்திய
இந்தியாவில் கொரோனா வைரசின் 2ம் அலையின் தாக்கத்தை சமாள
காஷ்மீரில் நாசவேலைகளை அரங்கேற்றி வந்த பயங்கரவாதிகளை
வங்கக்கடலில் அந்தமான் பகுதியில் வருகின்ற வெள்ளிக்கி
கொரோனா தொற்று நிலவரம் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை ந
இலங்கையிலிருந்து ஆபத்தான முறையில் கடல் வழியே இரண்டு க
