பாஜக தலைவர் வெட்டிக் கொலை: ஆலப்புழாவில் 144 தடை உத்தரவு!
Dec19
பாஜக தலைவர் வெட்டிக் கொலை: ஆலப்புழாவில் 144 தடை உத்தரவு!
இந்திய சமூக ஜனநாயக கட்சியின் (எஸ்டிபிஐ) மாநில செயலாளர் கே.எஸ்.ஷான் ஆலப்புழாவில் பைக்கில் சென்றுக் கொண்டிருந்தபோது கார் மோதியது. இதில் பலத்த காயமடைந்த ஷான் சிகிச்சைப் பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். கே.எஸ்.ஷானை ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்கள் கொலை செய்துவிட்டதாக எஸ்.டி.பி.ஐ தலைவர் எம்.கே. ஃபைசி குற்றம் சாட்டினார்.
இந்நிலையில், பா.ஜ.கவின் ஒபிசி மோர்ச்சா செயலாளர் ரஞ்சித் சீனிவாசனை ஆலப்புழாவில் உள்ள அவரது வீட்டில் இன்று அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிக் கொல்லப்பட்டார்.
கே.எஸ் ஷான் இறந்த அடுத்த நாளே பா.ஜ.க தலைவர் ரஞ்சித் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளதால் இது பழிவாங்கும் நோக்கத்தினால் நடந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இதையொட்டி ஆலப்புழாவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.