More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • 18 அரசுப் பள்ளிகளில் 20 கட்டிடங்கள் கண்டறியப்பட்டு இடிக்கும் பணி நடைபெறுகிறது!
18 அரசுப் பள்ளிகளில் 20 கட்டிடங்கள் கண்டறியப்பட்டு இடிக்கும் பணி நடைபெறுகிறது!
Dec 19
18 அரசுப் பள்ளிகளில் 20 கட்டிடங்கள் கண்டறியப்பட்டு இடிக்கும் பணி நடைபெறுகிறது!

கரூர் மாவட்டத்தில் ஆயிரத்து 72 அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், முதற்கட்டமாக 18 அரசுப்பள்ளிகளில் 20 கட்டிடங்கள் கண்டறியப்பட்டு இடிக்கும் பணி நடைபெறுவதாக ஆட்சியர் பிரபுசங்கர் தெரிவித்தார். 



நெல்லையில் தனியார் பள்ளி கழிவறைச் சுவர் இடிந்து 3 மாணவர்கள் பலியான சம்பவத்தை அடுத்து, தமிழகம் முழுவதும் சேதமடைந்த பள்ளிக் கட்டிடங்களை ஆய்வு செய்து இடிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக கரூர் மாவட்டத்தில் சிதிலமடைந்து காணப்படும் பள்ளிகளை இடிக்கும் பணி துவங்கி நடைபெற்று வருகிறது. 



இந்த நிலையில், கரூர் மாவட்டம் குளித்தலை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்து வரும் பழுதடைந்த கட்டிடங்களை இடிக்கும் பணிகளை மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் நேரில் பார்வையிட்டு ஆய்வுசெய்தார்.  பின்னர் பேசிய ஆட்சியர்,  கரூர் மாவட்டத்தில் அரசு, தனியார் பள்ளிகள் என மொத்தம் 1072 பள்ளிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், முதற்கட்டமாக 18 அரசுப்பள்ளிகளில் 20 கட்டடங்கள் கண்டறியப்பட்டு இடிக்கும் பணி நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.



மேலும், தனியார் பள்ளிகளுக்கு பள்ளி கட்டிடங்களின் உறுதித் தன்மையை அறிந்து அதற்கு ஏற்ற வகையில் நடடிவக்கை எடுக்க உத்தரவிடப்பட்டு உள்ளதாக தெரிவித்த ஆட்சியர் பிரபுசங்கர், பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கட்டிடங்களை அத்துறை சார்ந்த அலுவலர்களும், ஊரக வளர்ச்சித்துறையின் பராமரிப்பில் உள்ள கட்டிடங்களை அதே துறை சார்ந்த அலுவலர்களும் தொடர்ந்து கண்காணித்து தொடர் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிலித்தார். இந்த ஆய்வின்போது, குளித்தலை வருவாய் கோட்டாட்சியர் புஷ்பாதேவி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மதன்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.



 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jun17

சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் சுசில் அரி இன்டர்நே&

Sep15

உள்ளாட்சி தேர்தலில் தேமுதிகவின் பலத்தை நிச்சயமாக நிர

Jul30

பள்ளிக்கல்வி ஆணையர், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலு

Feb23

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பேரூராட்

Mar20

இந்தியாவில் மகன், மருமகள் மற்றும் இரண்டு பேத்திகளை வீ

Jan17

இந்தியா முழுவதும் நேற்று முதல் கொரோனா தடுப்பூசி போடும

May24

தமிழ்நாட்டில் இன்று முதல் ஒரு வாரத்திற்கு தளர்வுகளற்

Sep27

மத்திய அரசு விவசாயிகள் தொடர்பான 3 வேளாண்மை சட்டங்களை க

Jul24

சென்னை இரண்டாவது விமான நிலைய பணிகளை உடனே தொடங்க வேண்ட

Jul16

இந்தியாவில் சில மாதங்களுக்கு முன் புதிய தகவல் தொழில்ந

Mar16

தமிழக தேர்தல் களம் உச்சக்கட்ட பரபரப்பை நெருங்கிவருகி

Apr10

தடுப்பூசி, பாகிஸ்தானில் விமான தாக்குதல் என எல்லா விவக

Jul14

உத்தரகாண்ட் மாநிலத்தில் ஒவ்வொரு ஆண்டும் ‘கன்வர் யாத

Jun14

சென்னையில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிற

Mar11

கேரள மாநிலம் பெரும்பாபூர் பகுதியை சேர்ந்தவர் வைஷ்ணவி.

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Aug 30 (13:18 pm )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Aug 30 (13:18 pm )
Testing centres