முல்லைத்தீவு மாவட்டத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் முல்லைத்தீவில் இன்று (30) கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது .
கொவிட் – 19 சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றி இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது .
கடந்த 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8 ஆம் திகதி ஆரம்பித்த தொடர் கவனயீர்ப்பு போராட்டம் இன்று 1757 ஆவது நாளாக தொடர்ந்து இடம்பெற்று வருகின்ற நிலையில் இன்றைய தினம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டம் இடம்பெறும் கொட்டகைக்கு முன்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் எங்கே எங்கே உறவுகள் எங்கே, , குற்றவாளிகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்து, வேண்டும் நீதி வேண்டும், சர்வதேசமே பதில் சொல், மரண சான்றிதழும் வேண்டாம் நட்டஈடும் வேண்டாம் என்ற பல்வேறு கோஷங்களை எழுப்பியவாறும் பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை தங்கியவாறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டம் இடம்பெறும் இடத்துக்கு அண்மையாக 15 க்கும் மேற்பட்ட புலனாய்வாளர்கள் பிரசன்னமாகியிருந்ததோடு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை புகைப்படம் எடுத்து கண்காணிக்கும் செயற்பாட்டிலும் ஈடுபட்டனர் .
மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், மற்றும் வடக்கு மாகாணங்க
பிரித்தானியாவில் இனங்காணப்பட்ட B.1.1.7 என்ற புதிய வகை கொர
திருக்கடலூர் பகுதியில் இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்
தற்போதைய நிர்வாகத்திற்கு எதிராக பொதுமக்கள் போராட்டத
உருளைக்கிழங்கு என்ற போர்வையில் பாகிஸ்தானிலிருந்து
நிலக்கரி தாங்கிய கப்பல் ஒன்று நாட்டிற்கு வருகை தரவுள்
நல்லூர் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுக்கு உட்பட்ட த
ஊரடங்கு அமுல்படுத்தப்பட்ட நிலையில் வவுனியா நகரில் மு
சட்டவிரோதா மீன்பிடி நடவடிக்கையினால் பாதிக்கப்பட்டுள
பொரளை சஹஸ்புர அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து தவற
2021ஆம் ஆண்டு ஆரம்பம் முதல் இதுவரையான காலப்பகுதியில் மத
தமிழர்களுக்கான அரசியல் தீர்வைப் பொறுத்தவரை, மாகாணசபை
சீரற்ற காலநிலை காரணமாக ஏதேனும் அனர்த்தம் ஏற்பட்டால்,
திருகோணமலை மாவட்டத்தின் குச்சவெளி பிரதேச செயலக பிரிவ
மலையக புகையிரதப் பாதையில் கொழும்பிலிருந்து பதுளை நோக
