பாகிஸ்தானின் மத்திய குவெட்டா பகுதியில் வியாழக்கிழமை நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும் 15 பேர் காயமடைந்தனர்.
குவெட்டாவின் முக்கியப் பாதைகளில் ஒன்று ஜின்னா சாலை. இங்குள்ள அறிவியல் கல்லூரி அருகே நிறுத்தப்பட்டிருந்த காரின் அருகே வெடிகுண்டு மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். எந்த வகையை சேர்ந்த வெடிகுண்டு அது என்பது குறித்து
அதிகாரிகள் மதிப்பீடு செய்து வருகின்றனர்.
இறந்தவர்கள் உடல்கள் மற்றும் காயமடைந்தவர்கள் குவெட்டா பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். வெடி குண்டு வெடித்து சிதறிய பகுதியின் அருகிலுள்ள கட்டிடங்களின் கண்ணாடிகள் உடைந்திருந்தன. காயமடைந்தவர்களில் பெரும்பாலோர் கண்ணாடி துண்டுகள் மற்றும் ஆணி காயங்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நடப்பாண்டு ஏப்ரலில் குவெட்டா நகரில் நிகழ்த்தப்பட்ட சக்திவாய்ந்த வெடிகுண்டு தாக்குதலில் ஐந்து பேர் உயிரிழந்தனர். 12 பேர் காயமடைந்தனர். ஆகஸ்ட் 15 ஆம் தேதி ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய பின்னர், பாகிஸ்தான் எல்லைப்பகுதி மாகாணங்களில் வெடிகுண்டு தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குவெட்டா நகரில் செயல்பட்டு வரும் பாகிஸ்தான் தலிபான் இயக்கம் குண்டுவெடிப்பை நிகழ்த்தியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வலைதளம் ஹேக
பிரபல சமூக வலைதளங்களில் ஒன்றான டுவிட்டரின் கருத்து சு
உக்ரைனில் சண்டையிட சிரியாவின் கூலிப்படையை களமிறக்க ர
இந்தோனேசியாவில் மேற்கு ஜாவா மாகாணத்தில் சுபாங் என்ற இ
பிரித்தானியாவின் புதிய பிரதமராக ரிஷி சுனக் 57ஆவது பிரத
புதிய சாத்தான்-2 ஹைப்பர்சோனிக் ஏவுகணை மூலம் ஐரோப்பியக
உக்ரைனில் அதிகாரப்பூர்வமான மற்றும் உறுதிப்படுத்தப்ப
மத்திய பாக்தாத்தில் ஒரு வணிக வீதியில் ஏற்பட்ட இரட்டை
தைவானின் கிழக்கு கடற்கரை பகுதியில் அமைந்துள்ளது ஹுயல
ட்விட்டர் நிறுவனத்தை 4400 கோடி டொலருக்கு வாங்குவதாக ஒப்
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் (Vladimir Putin) ஆட்சியில் நீடிக்
கோனாக்ரி: மேற்கு ஆப்பிரிக்க நாடான கினியா, கடந்த 1958ம் ஆண
ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான் பயங்கரவாதிகளை அடக்கு
தாய்வானின் தென்கிழக்கு கடற்கரையில் ஏற்பட்ட 6.9 ரிக்டர்
தொழில் வளா்ச்சியில் முன்னிலை வகிக்கும் அமெரிக்கா, இங்
