More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • திரிகோணமலை எண்ணை கிடங்கு: இந்தியாவுடனான ஒப்பந்தம் 50 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு - இலங்கை அரசு!
திரிகோணமலை எண்ணை கிடங்கு: இந்தியாவுடனான ஒப்பந்தம் 50 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு - இலங்கை அரசு!
Jan 01
திரிகோணமலை எண்ணை கிடங்கு: இந்தியாவுடனான ஒப்பந்தம் 50 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு - இலங்கை அரசு!

இலங்கையின் திரிகோணமலை துறைமுகத்தில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தின் போது அமைக்கப்பட்ட 99 எண்ணை கிடங்குகளை இந்தியாவை சேர்ந்த இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவனம் பராமரித்து பயன்படுத்துவதற்கான ஒப்பந்தத்தை இந்தியாவுடன் இலங்கை அரசு கடந்த 2003-ம் ஆண்டு ஒப்பந்தம் செய்தது.



இந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்படுவதாக கடந்த பிப்ரவரி மாதம் அமைச்சர் உதயபிரபாத் கம்மன்பில திடீரென அறிவித்தார்.



இந்த நிலையில் இலங்கை தற்போது கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. இதையடுத்து இந்தியாவிடம் இருந்து கடனுக்கு எண்ணை இறக்குமதி செய்வதற்கான பேச்சுவார்த்தையில் இலங்கை அரசு ஈடுபட்டு வருகிறது.



இதன் தொடர்ச்சியாக திரிகோணமலை துறைமுகத்தில் எண்ணை கிடங்குகளை பராமரிப்பதற்கான ஒப்பந்தத்தை இந்தியாவுக்கு மீண்டும் வழங்க இலங்கை அரசு முடிவு செய்தது. இதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என்று அமைச்சர் உதயபிரபாத் கம்மன் பிலே தெரிவித்தார்.



இந்த நிலையில் திரிகோணமலை துறைமுகத்தில் எண்ணை கிடங்கு பராமரிப்பு ஒப்பந்தம் இந்தியாவுக்கு மேலும் 50 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அமைச்சர் உதயபிரபாத் கம்மன் பிலே கூறியதாவது:-



திரிகோணமலை துறைமுகத்தின் புதிய ஒப்பந்தம் இந்தியாவுடன் மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த ஒப்பந்தம் அமைச்சரவை ஒப்புதல் அளித்ததும் அடுத்த வாரம் கையெழுத்தாகிறது. எண்ணை கிடங்குகள் பராமரிப்பு ஒப்பந்தம் இந்தியாவுக்கு மேலும் 50 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படுகிறது.



99 எண்ணை கிடங்குகளில் 14 கிடங்குகளை இந்தியன் ஆயில் நிறுவனத்துக்கு 50 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. மீதமுள்ள 61 எண்ணை கிடங்குகள் சிலோன் பெட்ரோலியம் கார்ப்பரே‌ஷன் மற்றும் இந்தியன் ஆயில் நிறுவனம் ஆகியவை இணைந்து நிர்வகிக்கும்.



 



இவ்வாறு அவர் கூறினார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Feb02

முகக் கவசம் அணியத் தவறிய மற்றும் சமூக இடைவெளி யை பின்ப

Jan22

சமூக ஊடகங்கள், இணைய அடிப்படையிலான பயன்பாடுகள் மற்றும்

Feb02

உலக சதுப்பு நில தினத்தை முன்னிட்டு சுற்றுச்சூழல் அமைச

Jan27

வடக்கு மாகாணத்தில் மருத்துவர்கள், தாதியர்கள் உட்பட்ட

Dec29

பொருளாதார நெருக்கடிகள் காரணமாக சினம் கொண்டுள்ள மக்கள

Mar15

இலங்கையில் பணத்தை அச்சிடும் நடவடிக்கை காரணமாக டொலர் ந

Feb12

நுவரெலியா - நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தொலஸ

Feb13

ஒக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகா கோவிஷீல்ட் தடுப்பூசி பெ

Jan11

நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளும் மீண்டும் நேற்

Sep21

பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திர

Feb04

தெற்கு கடலில் காற்றின் வேகம் அதிகரிக்கும் என வளி மண்ட

Sep07

இலங்கையின் கடனை மறுசீரமைப்பதில் கடன் வழங்கும் நாடாக அ

Jan19

யாழ்.பல்கலைக்கழகத்தில் மீண்டும் முள்ளிவாய்க்கால் நி

Mar25

நாட்டில் இன்று ஒரு தெளிவான கொள்கையும் திட்டமும் செயற்

Apr19

அரசின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்களுக்கிடையிலான கூ

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Apr 18 (06:47 am )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Apr 18 (06:47 am )
Testing centres