இந்தியாவில் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4,003 ஆக அதிகரித்துள்ளது.
தென்னாப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட ஒமிக்ரான் தொற்று தற்போது பல நாடுகளில் வேகமாக பரவி வருகின்றது. இதற்கு இந்தியாவும் விதி விலக்கு அல்ல. இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த சில வாரங்களை காட்டிலும் அதிவேகமாக பரவி வரும் சூழலில், தொற்று பாதிப்பு 1.50 லட்சத்தை தாண்டியுள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,79,723 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரேநாளில் 46,569 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 146 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
இந்நிலையில் இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 4033 ஆக அதிகரித்துள்ளது. நேற்று 3,623 ஆக இருந்த ஒமிக்ரான் பாதிப்பு ஒரே நாளில் 4033 ஆக உயர்ந்துள்ளது. ஒமிக்ரானில் இருந்து 1,552 பேர் குணமடைந்த நிலையில் 2451 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. இதுவரை 27 மாநிலங்களில் ஒமிக்ரான் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ள இன்னிலையில், அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1,216 பேரும், ராஜஸ்தானில் 1,216 பேரும், டெல்லியில் 513 பேரும் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளனர்.தமிழகத்தில் 185 பேருக்கு ஒமிக்ரான் இருப்பது குறிப்பிடத்தக்கது.
ரஷ்ய செல்வந்தரும், செல்சி அணியின் முன்னாள் உரிமையாளரு
புதின் தனது நீண்ட காலத் தோழியான அலினா கபாவே என்ற பெண
ரஷியாவுடனான போரில் பாதிப்பு அடைந்துள்ள உக்ரைனுக்கு ம
உக்ரைனில் தாக்குதல் நடத்தி வரும் ரஷிய ராணுவம், பொது மக
ரஷ்யா அணு ஆயுதம் மூலம் பிரித்தானியாவைத் தாக்கினால், ப
சவுதி அரேபியாவில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் வெள
உலக அளவில் கோவிட் - 19 தினசரி பாதிப்பில் அமெரிக்கா உச்
பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தின் தலைநகர் கராச்சியில்
அமெரிக்காவின் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் கொரோனா த
1990 ஆம் ஆண்டு சோவியத்தை தகர்த்தவர்கள் தங்கள் கனவு நிறைவ
பிலிப்பைன்ஸில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால், மொத்
முதல் உலகப்போர்க்காலத்தில் நடந்ததுபோல, பதுங்கு குழிக
அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் பெருகி வருகிறது.
முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வலைதளம் ஹேக
சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நா
