விமானத்தின் எரிபொருள் கலவையை மாற்றியமைத்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட சகுராய் தனியார் விமான சேவையின் முகாமைத்துவ பணிப்பாளர் மற்றும் பிரதம பொறியியலாளர் ஆகியோர் இன்று (11) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட இருக்கின்றனர்.
சந்தேகநபர்கள் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் நேற்று (10) கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் 53 வயதான இரத்மலானையை வசிப்பிடமாகவும் மற்றையவர் 46 வயதான ஹொரணையை வசிப்பிடமாகவும் கொண்டவர்களாவர்.
இந்த தனியார் விமான சேவைக்கு சொந்தமான இரண்டு விமானங்கள் அண்மையில் பயாகல மற்றும் கட்டானாவில் அவசரமாக தரையிறக்கப்பட்டன. கட்டான கிம்புலாபிட்டிய பகுதியில் விமானம் ஒன்று அவசரமாக தரையிறக்கப்பட்டதில் இரு வெளிநாட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் விசாரணை நடத்தி இலங்கை விமானப்படையிடம் தொழில்நுட்ப அறிக்கையை கோரியுள்ளனர்.
மனித உயிருக்கு அல்லது வேறு ஒருவரின் தனிப்பட்ட பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவித்தமை போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர் ஒருவரை ஆபத்தில் ஆழ்த்துதல் அல்லது கடுமையாக காயப்படுத்துதல் அல்லது கடுமையாக காயப்படுத்துதல் போன்ற குற்றச்சாட்டின் கீழ் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சந்தேகநபர்கள் இன்று நீர்கொழும்பு நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மிரிஹான பொலிஸ் நிலையத்தில் நான்கு ஊடகவியலாளர்கள், ஒரு
கோட்டா வீட்டுக்குப் போ" என்ற கோஷத்துடன் காலிமுகத்தி
விமான நிலையங்களை மீண்டும் திறந்து ஐந்து நாட்களுக்குள
தமிழர்களின் விடையங்களை பயன்படுத்தி அமெரிக்கா போன்ற ந
இந்திய அரசின் வெக்சின்மைத்ரி திட்டத்தின் கீழ் இலங்கை
மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் உள்ள கிரான்குளத
ஸ்ரீ தலதா மாளிகை வளாகத்தின், அதி உயர் பாதுகாப்பு வலயமா
நாட்டில் நாளை முதல் 21ஆம் திகதி வரை மின்வெட்டு அமுல்படு
அரசியல் கைதிகள் மூவரின் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் இன
அமைச்சர்கள் சிலர் வெளியில் கூறாமல் தடுப்பூசிகளை போடு
மட்டக்களப்பு கரடியனாறு பகுதியில் சட்டவிரோதமாக மணல் 
பிலவ வருட தமிழ் புத்தாண்டை கொண்டாடும் சகல மக்களுக்கும
வடக்கு மாகாணத்தில் எதிர்வரும் பெப்ரவரி மாதம் இரண்டாம
களுவாஞ்சிக்குடி தனிமைபடுத்தல் ஊரடங்கு சட்டத்தை மீறி
தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் இம்முறை எழுச்சிபூர
