விமானத்தின் எரிபொருள் கலவையை மாற்றியமைத்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட சகுராய் தனியார் விமான சேவையின் முகாமைத்துவ பணிப்பாளர் மற்றும் பிரதம பொறியியலாளர் ஆகியோர் இன்று (11) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட இருக்கின்றனர்.
சந்தேகநபர்கள் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் நேற்று (10) கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் 53 வயதான இரத்மலானையை வசிப்பிடமாகவும் மற்றையவர் 46 வயதான ஹொரணையை வசிப்பிடமாகவும் கொண்டவர்களாவர்.
இந்த தனியார் விமான சேவைக்கு சொந்தமான இரண்டு விமானங்கள் அண்மையில் பயாகல மற்றும் கட்டானாவில் அவசரமாக தரையிறக்கப்பட்டன. கட்டான கிம்புலாபிட்டிய பகுதியில் விமானம் ஒன்று அவசரமாக தரையிறக்கப்பட்டதில் இரு வெளிநாட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் விசாரணை நடத்தி இலங்கை விமானப்படையிடம் தொழில்நுட்ப அறிக்கையை கோரியுள்ளனர்.
மனித உயிருக்கு அல்லது வேறு ஒருவரின் தனிப்பட்ட பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவித்தமை போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர் ஒருவரை ஆபத்தில் ஆழ்த்துதல் அல்லது கடுமையாக காயப்படுத்துதல் அல்லது கடுமையாக காயப்படுத்துதல் போன்ற குற்றச்சாட்டின் கீழ் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சந்தேகநபர்கள் இன்று நீர்கொழும்பு நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பொரளையில் அமைந்துள்ள பிரபல மலர்ச்சாலையொன்றின் உரிமை
வென்னப்புவ பகுதியில் புகையிரதத்தில் மோதி நபர் ஒருவர்
அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலம் மீதான விவாத
சட்டவிரோதமாக ஐரோப்பிய நாடொன்றுக்கு செல்ல முற்பட்ட இள
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி ந
சிறிலங்காவின்74வது தேசிய சுதந்திர தினம் கொண்டாட இன்னு
கொவெக்ஸ் சலுகையின் கீழ் 40 இலட்சம் கொரோனா தடுப்பூசிகளை
இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால், நாடாளுமன்ற உற
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இரண்டு நாட்கள் உத்திய
கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மிருசுவில், கரம்பக
ஆசிரியர் மற்றும் ஆசிரியர் தொழிலுக்கான பொறுப்புகளை நி
தற்போது நாட்டில் அமுலாக்கப்பட்டுள்ள முழுமையாக முடக்
வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் 10 வயதுடைய சிறுமி ஒருவ
80 இலட்சம் ரூபாய் பெறுமதியான ‘குஷ்’ எனப்படும் போதை
மாகாணங்களுக்குள் மட்டுமே ரயில் சேவைகளை மேற்கொள்ள தீர
