மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மன்னார் - தலைமன்னார் பிரதான வீதி பொது விளையாட்டு மைதான சந்தியில் பாரிய விபத்து சம்பவம் நேற்று (11) மாலை இடம்பெற்றுள்ளது.
பிரதேச செயலகத்திற்குச் சொந்தமான வாகனம், டிப்பர், முச்சக்கரவண்டி, துவிச்சக்கர வண்டி என வரிசையில் சமிஞ்ஞைக்காக காத்திருந்த வாகனங்களை மன்னார் பொது வைத்தியசாலை வீதியூடாக விளையாட்டு மைதானம் நோக்கிப் பயணித்த பேருந்து மோதி தள்ளியது.
குறித்த பேருந்தானது வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியில் சமிஞ்ஞைக்காக காத்திருந்த ஏனைய வாகனங்களை மோதி தள்ளியதில் முச்சக்கரவண்டி முற்று முழுதாக சேதமடைந்ததுடன், ஏனைய வாகன சாரதிகள் சிறிய காயங்களுக்கு உள்ளாகி உள்ளனமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் விபத்தை ஏற்படுத்திய தனியார் பேருந்து ஒன்றின் சாரதி அருகில் இருந்த வீதி ஒன்றில் பேருந்தை நிறுத்தி விட்டுத் தப்பித்துச் சென்றுள்ளார்.
இதனைத் தொடர்ந்து மன்னார் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கையின் அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்த
இலங்கையில் தீவிரமடைந்துள்ள இராணுவத்தின் அழுத்தம் கா
கொரோனா தொற்று அதிகரிப்பு காரணமாக தனிமைப்படுத்தப்பட்
அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலம் மீதான விவாத
2022 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட
எரிபொருளுக்காக வரிசையில் காத்திருக்க முடியாது என அகி
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேல
கோட்டா வீட்டுக்குப் போ" என்ற கோஷத்துடன் காலிமுகத்தி
இலங்கையில் நேற்று ஏற்பட்ட அரசியல் மாற்றத்துடன் ரூபாவ
தீபாவளி தினத்தன்று தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்
நிதி மோசடிச் சம்பவத்தில் ஈடுபட்டு சிறையில் உள்ள சந்தே
கொரோனா சிகிச்சை நிலையங்களில் பணியாற்றும் உள்ளுராட்ச
சுவிட்சர்லாந்தில் உள்ள அரச அனுமதிபெற்ற பணமாற்று நிறு
முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில், 08 அமைச்
அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடலுக்கு முன்பாக நின்
