பேருவளை பிரதேசத்தில் 45 நாட்களுக்கு முன்னர் நரி கடித்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
களுத்துறை, நாகொட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் குறித்த பெண் உயிரிழந்துள்ளதாக தேசிய சுகாதார நிறுவகத்தின் பணிப்பாளர் தமர களுபோவில தெரிவித்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் பேருவளை, வெதகொடலந்த பிரதேசத்தில் சிறிய குடிசையில் வசித்து வந்த 54 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாய் என அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது .
சுமார் 45 நாட்களுக்கு முன்னர், நள்ளிரவில், குடிசைக்குள் புகுந்த நரி, உறங்கிக் கொண்டிருந்த பெண்ணின் கால்களின் குதிகால் பகுதியைக் கடித்து சென்றுள்ளது. எனினும் அதற்கு உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை என வைத்தியர் தமர களுபோவில கூறியுள்ளார்.
இந்த நிலையில், கடந்த 9ஆம் திகதி அவருக்கு வெறிநோய் அறிகுறிகள் தோன்றியதாகவும், அவரது இரு மகன்களும் அவரை களுத்துறை நாகொட பொது வைத்தியசாலையில் அனுமதித்ததாகவும், மறுநாள் அவர் உயிரிழந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கமைய, பேருவளை வளதர வெதகொட பிரதேசத்தில் நரி, நாய் கடிக்கு உள்ளானவர்களுக்கு உடனடியாக தடுப்பூசி போட வேண்டும் எனவும் வளர்ப்பு நாய்கள் இருந்தால் உடனடியாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் எனவும் வைத்தியர் தமர களுபோவில தெரிவித்தார்
வவுனியா- செட்டிகுளம் நகர்பகுதியில் இடம்பெற்ற விபத்தி
புதிய மின்சார இணைப்புக்கள் வழங்குவது குறைக்கப்பட்டு
இலங்கையில் இரவு வேளையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பத
அலரி மாளிகை பகுதியில் அரசாங்கம் குறிப்பாக மகிந்த ராஜப
இந்தியக் கடற்றொழிலாளர்களின் எல்லை தாண்டிய சட்ட விரோத
இலங்கையின் 74ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் இன்றைய தினம்
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இரண்டு நாட்கள் உத்திய
கொரிய வேலைகளுக்கு தகுதி பெற்றுள்ள இலங்கையர்கள் 5,800 பேர
முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ச சொத்துக்களில் பெ
நாட்டில் மூவரில் ஒருவர் சோம்பேறியாக உள்ளனர் என அடையாள
யாழ்.குடாநாட்டில் 1இ614.11 ஏக்கர் நிலத்தை உயர் பாதுகாப்பு
யாழ்ப்பாணத்திற்கு வந்த பெருந்தோட்ட அமைச்சர் ரமேஷ் பத
வெல்லவாய எல்லவல நீழ்வீழ்ச்சியில் குளிப்பதற்காக செ
இலங்கையில் இடம் பெற்ற யுத்த காலத்தில் சர்வதேசத்தால் த
யாழ்ப்பாண நகரப் பகுதியில் அண்மையில் அதிகளவானோர் கொரோ
