மும்பை வார்தா தனியார் ஆஸ்பத்திரி வளாகத்தில் 11 சிசுக்களின் மண்டை ஓடுகள் மற்றும் 54 எலும்புக்கூடுகள் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் குறித்த மருத்துவமனையில் சட்டவிரோத கருக்கலைப்பு நடந்ததா என்பது குறித்து போலீசார் விசேட விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாா்தா மாவட்டத்தை சேர்ந்த 13 வயது சிறுமியை, சிறுவன் ஒருவன் கற்பழித்ததாக கூறப்படுகிறது. இதில் சிறுமி கர்ப்பமான நிலையில் சிறுவனின் பெற்றோர் அந்த சிறுமியின் கர்ப்பத்தை கலைக்குமாறு அவளின் பெற்றோரை மிரட்டியதாக தெரிகிறது.
இந்த மிரட்டலுக்கு அடிபணிந்த பெற்றொர் வார்தா மாவட்டம் அர்வி தாலுகாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிறுமிக்கு சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த பொலிசார் சிறுவனின் பெற்றோரை கைது செய்ததுடன் சட்டவிரோதமாக கருவை கலைத்த மருத்துவரையும் கைது செய்தனர்.
இதைதொடர்ந்து போலீசார் அந்த ஆஸ்பத்திரி வளாகத்தில் அதிரடி சோதனை நடத்தியதில் மருத்துவமனை வளாகத்தில் சிசுக்களின் 11 மண்டை ஓடுகள் மற்றும் 54 எலும்பு கூடுகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதனால் அந்த ஆஸ்பத்திரியில் சட்டவிரோதமாக மேலும் பல கருக்கலைப்பு நடத்திருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நிலையில், அதுகுறித்து பொலிசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.
இந்தியாவின் கோவாக்சின் தடுப்பூசி கொரோனா வைரஸ் தொற்றி
உக்ரைன் ஜனாதிபதியுடன் தொலைபேசியில் உரையாடிய இந்திய ப
திபெத் புத்த மத தலைவர் தலாய்லாமா ஆவார். இவர் நேற்று தனத
எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கை
திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் அன்ப
திண்டுக்கல் மேற்கு மரியநாதபுரம் பகுதியை சேர்ந்த மாணி
பிரதமர் மோடி நேற்று கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள எய
மேட்டூர் அணையை திறக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற
கொரோனா தடுப்பூசி பணி எப்போது முடிவடையும் என்று மக்களவ
கொரோனாவின் எதிரொலியாக உலகம் முழுவதும் வறுமை அதிகரித்
கேரளாவில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா நடத்திய முழு
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அற
காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன
இஸ்ரேலின் என்எஸ்ஓ அமைப்பின் பெகாசஸ் உளவு மென்பொருள் ம
கேரள சுகாதாரத் துறை வெளியிட்ட செய்தியில், கடந்த 24 மணி ந
