இந்தியாவின் ஜார்க்கண்ட மாநிலத்தில் ஐந்தாண்டுகளுக்கு முன்னர் விபத்து காரணமாக பக்கவாதம் ஏற்பட்டு, வாய் பேச முடியாமல் போன ஒருவர், கடந்த 4 ஆம் திகதி கொரோனா தடுப்பூசியான கோவிஷீல்ட்டை செலுத்திக்கொண்ட பின்னர் குணமடைந்துள்ளார்.
55 வயதான துலர்சந்த் முண்டா (Dularchand Munda )என்ற இந்த நபர் தற்போது எழுந்து நடப்பதுடன் நன்றாக பேசுகிறார். இது மிகவும் ஆச்சரியத்திற்குரிய விடயம் என ஜார்க்கண்ட் மாநிலம் பொகாரோவில் உள்ள வைத்தியசாலையின் சத்திர சிகிச்சை நிபுணரான மருத்துவர் ஜிதேந்திரகுமார் (Dr Jitendra Kumar ) குறிப்பிட்டுள்ளார்.
ஐந்தாண்டுகளுக்கு முன்னர் நடந்த விபத்தில் கால்கள் முடங்கி, குரல் பேச முடியாது போனதாகவும் ஜனவரி 4 ஆம் திகதி தடுப்பூசியை செலுத்திக்கொண்ட பின்னர் தன்னால் கால்களை நகர்த்தவும் பேச முடிவதாகவும் பொகாரோவில் உள்ள சல்காதி கிராமத்தை சேர்ந்த துலர்சந்த் முண்டா தெரிவித்துள்ளார்.
இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள மருத்துவர் ஜிதேந்திர குமார், “ இந்த சம்பவத்தை கண்டு நான் வியப்படைந்தேன். இதனை விஞ்ஞானிகள் ஆய்வு செய்ய வேண்டும்.
சில நாட்களுக்கு முன்னர் சுகவீனமுற்று குணமடைந்தால், அதனை சாதாரணமாக எடுத்துக்கொள்ளலாம். ஆனால், ஐந்தாண்டுகளுக்கு பின்னர் தடுப்பூசியை செலுத்திக்கொண்ட பின்னர் திடீரென குணமடைந்தை நம்ப முடியவில்லை. இது சுகாதார துறை அதிகாரிகளின் ஆய்வுக்கு உட்பட்ட விடயம்” எனக் கூறியுள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று பலத்த
சர்வதேச பயணிகளுக்கான கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை இந
வாட்ஸ்அப் நிறுவனம் சமீபத்தில் பயனர்களின் தனியுரிம
வாக்களிக்காதவர்கள் வெட்கப்படும் அளவுக்கு நன்மை செய்
அதிமுகவை வழி நடத்தப்போவதாக சசிகலா அக்கட்சி தொண்டர்கள
மாநில அரசாங்கங்களின் இலவசத் திட்டங்களால் வரிசெலுத்த
மேட்டூர் அணையை திறக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற
வேலை நிறுத்தம் மற்றும் விடுமுறைகள் காரணமாக கடந்த வாரத
பிரதமர் நரேந்திர மோடி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க நேற்
தமிழக மாவட்டம் செங்கல்பட்டில் ஓடும் பேருந்தில் பள்ளி
தமிழில் எனக்கு பிடிக்காத ஒரே வார்த்தை கூட்டணி என தேமு
முன்னாள் துணை பிரதமரும், முன்னாள் உள்துறை அமைச்சருமான
அதிமுக ஒ
குஜராத் மாநகராட்சி தேர்தல் முடிவுகள் நேற்று முன்தினம
