இலங்கை மின்சாரசபையின் உயர் அதிகாரிகள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் அறிவுறுத்தல்களை மதிப்பதில்லை என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார குற்றம் சுமத்தியுள்ளார்.
இலங்கை மின்சாரசபையின் பதில் பொது முகாமையாளர் பதவிக்கு சுசந்த பெரேராவை நியமித்தமைக்கு மின்சாரசபையின் பொறியியலாளர்கள் தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
மின்சாரசபையின் மரபுகளுக்கு அமைய அதிக சேவை மூப்பு உடைய மின் பொறியியலாளரே பொது முகாமையாளர் பதவிக்கு அமர்த்தப்படுவார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், மரபுகளை மீறி தகுதி குறைந்த ஒருவர் பொது முகாமையாளர் பதவிக்கு அமர்த்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். மின்சாரசபையில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலைமைகளுக்கு இந்த நியமனமே பிரதான ஏது என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
எனவே தகுதியில்லாத ஒருவரை பதவியில் அமர்த்திய இலங்கை மின்சாரசபையின் உயர் அதிகாரிகளே இந்த பிரச்சினைகளுக்கு பொறுப்பு சொல்ல வேண்டுமென அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
பொது முகாமையாளர் பதவிக்கு அமர்த்தும் போது உரிய மரபுகளை பின்பற்றுமாறு ஜனாதிபதி அறிவுறுத்தல் வழங்கியுள்ள நிலையில், அதனையும் மீறி சிலர் செயற்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் (Prof. G L Peiris) இந
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும், இந்தியத் தூதுவர் க
யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையினுள் இயங்கும் சிற்று
கொழும்பு, நுகேகொடை பிரதேசத்தில் உள்ள பௌத்த விகாரை ஒன்
நுவரெலியா - வெலிமடை பிரதான வீதியில் ஹக்கலை பிரதேசத்தி
போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோக
வவுனியா வைத்தியசாலையில் பணியாற்றும் மருத்துவ சேவையா
கொழும்பில் இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்வில் கலந்துகொ
நாட்டில் இதுவரை 2,472,807 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் முத
இலங்கையில் இருந்து வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லப்பட
யாழ்ப்பாணம் கடற்பரப்பரப்பிற்குள் அத்துமீறி கடற்றொழி
சமூக ஆர்வலர் டான் பிரியசாத் குற்றப் புலனாய்வுப் பிரிவ
நாடு கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில
நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின
உயர்ந்த கட்டிடங்களுக்கு மாறாக ரம்மியமான ச
