அம்பாறை திருக்கோவிலை பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட எஸ்.பி. கனகசபாபதி இன்று கனடாவில் உயிரிழந்துள்ளமை மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இவர் 90 ஆம் ஆண்டு காலப்பகுதியில் அம்பாறை திருக்கோவில் முருகன் ஆலயத்தின் படம் பொறிக்கப்பட்ட கனேடிய முத்திரையை வெளியிட்டவர் ஆவார்.
கனகசபாபதி, பூபாலபிள்ளை (1945-6-20) மட்டக்களப்பு, திருக்கோவிலைச் சேர்ந்த எழுத்தாளர் ஆவார்.
இவரது தந்தை பூபாலபிள்ளை; தாய் சுந்தரம்மா. இவர் திருக்கோயில் மெதடிஸ்த மிசன் பாடசாலை, கல்லடி இராமகிருஷ்ணமிசன் சிவானந்த வித்தியாலயம் ஆகியவற்றில் கல்வி கற்றுப் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைமாணிப் பட்டத்தைப் பெற்றார்.
இவர் எஸ். பி.செவ்வேள், கதா, கனெக்ஸ், கல்கிதாசன் ஆகிய புனைபெயர்களைக் கொண்டவர். திருஞானவாணி, அறப்போர் அரியநாயகம், மட்டக்களப்பு மாநிலத்தின் பண்டைய வரலாற்று அடிச்சுவடுகள், கல்கிதாசன் கவிதைகள், தேரோடும் திருக்கோவில் ஆகியன இவரது நூல்கள். கனடாவில் வெளிவந்த முதல் சஞ்சிகையான 'எழில்' சஞ்சிகையின் ஆசிரியராகப் பணியாற்றிய இவர், கூத்துக் கலையில் ஈடுபாடு கொண்டு வில்விஜயன் என்னும் வடமோடிக் கூத்தைக் கனடாவில் பழக்கி அரங்கேற்றியவர்.
இந்திய வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்ப
தமிழகத்திலிருந்து இலங்கைக்கான அதிசொகுசு உல்லாச கப்ப
இலங்கையில் ஒமிக்ரோனின் புதிய மாறுபாட்டால் கோவிட் நோய
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) இலங்கை தொடர்பான அறிக்கையை
பாராசிட்டமால் மாத்திரையை தினமும் பயன்படுத்தினால் இர
நாட்டில் மின்வெட்டை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் வ
பொதுவாகவே மாயாஜாலம் என்றால் அனைவருக்கும் பிடிக்கும்,
தற்போது இலங்கை வந்துள்ள ஐக்கிய இராச்சியத்தின் மிஸ் எவ
2021 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு விண்ணப
சிறிய கம்பியால் செய்யப்பட்ட ஹூக்கு எனப்படும் சேப்டி ப
இந்தியாவில் நக்சலைட்டுகள் ஆதிக்கம் நிறைந்த மாநிலங்க
சிங்கப்பூரில் இந்திய வம்சாவளியைச் சேர்த்த தமிழ் இளைஞ
இலங்கையில் அந்நிய செலாவணி கையிருப்பு வேகமாக தீர்ந்
பூனை எப்போதுமே வீட்டில் சிங்கிளாக மட்டுமே இருக்கும்.
ரஷ்யாவின் நடவடிக்கைக்கு பதிலடியாக உக்ரைனில் உள்ள முன
