எம்பிலிப்பிட்டிய, பணாமுர – கடுவன வீதியில் கமகந்த பிரதேசத்தில் மண் அகழும் இயந்திரம் ஒன்றினால் மோதப்பட்டு 12 வயதுள்ள சிறுவன் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
நேற்று கடுவன பிரதேசம் நோக்கி கற்களை ஏற்றிச்சென்ற பாரஊர்தியொன்றை மேடான பிரதேசத்தில் வைத்து மேற்படி மண் அகழும் இயந்திரம் தள்ளிக்கொண்டிருந்தபோது, குறித்த சிறுவன் பாரஊர்தியில் ஏற முற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
அதன்போது, மண்அகழும் இயந்திரத்தின் முன்பக்க சில்லில் சிக்குண்டு சிறுவன் பலத்த காயமடைந்துள்ளார்.
பின்னர் சிறுவனை எம்பிலிப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதித்தபோது, உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்தவர் தடயம்கந்த பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்றும் தெரியவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மண்அகழும் இயந்திர இயக்குநர் பணாமுர காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கொரோனா தொற்றினால் உயிரிழந்த வைத்தியர் கயான் டந்தநாரா
தேசிய கடல்சார் வளங்களை பாதுகாக்கும் வாரம் எனும் தொனிப
யாழ்ப்பாண மாவட்டத்திற்கு தேவையான எரிபொருள் கையிருப்
முல்லைத்தீவு, உடையார்கட்டு வடக்கு மூங்கிலாறில் 18-12-2021 அ
வவுனியா, குட்செட் வீதி, உள்ளக வீதியில் அமைந்துள்ள வீடொ
இலங்கை அரசு கோரிய ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் கடனுக்
இலங்கை முழுவதும் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு தீபாவளி முற்பணமாக 15 ஆ
சைபர் தாக்குதல் காரணமாக இலங்கையில் google.lk இணையதளம் முடக்
யாழ்ப்பாணம் - கொக்குவில் புகைரத நிலையத்திற்கு அருகில்
பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்கு இலங்கை மத்திய வங
சனத் ஜெயசூர்யவை பின்னுக்குத் தள்ளி, டெஸ்ட் கிர
பெண்களுக்கான திருமண வயதில் மாற்றத்தை கொண்டு வருவதற
குழந்தைகள் மத்தியில் இன்புளுவன்சா A மற்றும் B ஆகிய இரண்
மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று களுவ
