More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்துக்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணி போர்க்கொடி!
அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்துக்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணி போர்க்கொடி!
Aug 30
அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்துக்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணி போர்க்கொடி!

அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தை மக்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அரசு எடுத்துள்ள தீர்மானத்தால் மக்கள் பாரிய விளைவுகளை எதிர்கொண்டுள்ளனர்.



என்று மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துனெத்தி தெரிவித்தார். 

அவர் மேலும் தெரிவித்ததாவது:-



நாடு தற்போது முகங்கொடுத்துள்ள கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலுடன் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.



இவ்வாறான நிலையில் அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக அதிகரித்துள்ளது.



அதேபோன்று அத்தியாவசிய மருந்துகளின் விலையும் அதிகரித்துள்ளது.



இவை தொடர்பில் அரசு எடுத்துள்ள தீர்மானத்தால் மக்கள் பாரிய விளைவுகளை எதிர்கொண்டுள்ளனர்.



தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வழங்கும் கொடுப்பனவையும் அரசு குறைத்துள்ளது.



அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிப்பு தொடர்பிலேயே அண்மைய நாட்களில் அதிகமாகப் பேசப்பட்டு வருகின்றது.



உலக சந்தையில் டொலரின் பெறுமதி அதிகரித்தமை, ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்தமை, ஏற்றுமதி, இறக்குமதி வரையறுக்கப்பட்டமை, கொரோனாத் தொற்றால் நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்பட்ட வீழ்ச்சி போன்றவையே அத்தியாவசியப் பொருட்களின் விலை ஏற்றத்துக்குக் காரணம் என்று அரசு தொடர்ச்சியாகக் கூறி வருகின்றது.



தினமும் நுகர்வுக்குப் பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருட்களான பால்மா, சீனி, எரிவாயு, மண்ணெண்ணெய் அதேபோன்று எரிபொருட்களின் விலையேற்றத்தை மக்களால் எதிர்கொள்ள முடியவில்லை.



இதில் பிரதான காரணியாக சீனியின் விலையேற்றம் காணப்படுகின்றது.



அதேபோன்று பால்மா, பிரதான ஒளடதங்களுக்கான தட்டுப்பாடு பாரிய பிரச்சினையாக உள்ளது.



மக்கள் தங்களது பொறுப்பை தாங்களே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது போலவே அரசு செயற்பட்டு வருகின்றது.



துறைசார்ந்த அமைச்சர் தன்னால் எதனையும் செய்ய முடியாது என்று கூறினார்.



தற்போதைய நெருக்கடிச் சூழலில் இவ்வாறான ஒரு பதிலையா மக்கள் அரசிமிருந்து எதிர்பார்க்கின்றனர் என்பதே எமது கேள்வியாக உள்ளது.



அரசு தனது பொறுப்பை எவ்வாறு கைவிட்டுள்ளது என்பது இதனூடாகத் தெரியவருகின்றது – என்றார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Oct21

வடக்கு மாகாண ஆளுநராக புதிதாக பதவியேற்றுள்ள ஜீவன் தியா

Oct22

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கடந

Jan25

இன்று காலை 6,00 மணிமுதல் சில பகுதிகள் தனிமைப் படுத்தலிலி

Mar13

சந்தையில் சில சீமெந்து நிறுவனங்கள் தங்களது உற்பத்திக

Feb01

வளவை ஆற்றில் நீராட சென்ற நிலையில், பாடசாலை மாணவி ஒருவர

Mar23

கரிபீயனில் ஒரு சிறிய இரட்டை தீவு தேசமான செயிண்ட் கிட்

Jan27

பிணை முறிக்கடனைத் திருப்பிச் செலுத்துவதை தாமதிப்பதற

Jan28

கிழக்கு முனையை இந்தியாவிற்கு வழங்குவது தொடர்பாக பல்வ

Jun13

இலங்கையில் மேலும் இரு வாரங்களுக்கு முழுநேரப் பயணக் கட

Jun21

நடமாட்டத்தடை தளர்த்தப்பட்டுள்ள நிலையில் மட்டுப்படுத

Oct13

வடக்கு கிழக்கு சிவில் சமூகத்தினரால் முன்னெடுக்கப்பட

Aug05

வடக்கு மாகாணத்தில் மேலும் 130 பேருக்குக் கொரோனா வைரஸ் த

Feb13

பாடசாலை மாணவர்களுக்கு 10 வெளிநாட்டு மொழிகளை கற்பிப்பத

Sep21

ஒன்றாய் எழுவோம்' எனும் தொனிப்பொருளில் 75ஆவது சுதந்திர

Sep30

மாலைத்தீவின் சுகாதார இராஜாங்க அமைச்சர் வைத்தியர் ஷா ம

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jun 27 (11:14 am )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jun 27 (11:14 am )
Testing centres