யாழ் போதனா மருத்துவமனையில் நேற்று திங்கட்கிழமை நிலவரப்படி கொவிட்-19 நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட 129 நோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர். அவர்களில் 10 பேர் அதிதீவிர சிகிச்சைப் பிரிவுகளில் மருத்துவக் கண்காணிப்புக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.
யாழ் மாவட்டத்தில் அதிகரித்து வரும் கொவிட்-19 நோய்த்தொற்றுக் காரணமாக மருத்துவமனைகளில் இட ஒதுக்கீடு முழுமையடைந்துள்ளன என்று தெரிவிக்கப்படுகிறது.
யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை, தெல்லிப்பளை, பருத்தித்துறை மற்றும் சாவகச்சேரி மருத்துவமனைகளிலும் கொவிட்-19 சிகிச்சைப் பிரிவுகள் அமைக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை தேவைப்படும் நோயாளிகள் கண்காணிக்கப்படுகின்றனர்.
இந்த நிலையில் யாழ் போதனா மருத்துவமனையில் 129 கொவிட்-19 நோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர். அங்கு அமைக்கப்பட்டு 2 அதிதீவிர சிகிச்சைப் பிரிவுகளில் 10 கொவிட்-19 நோயாளிகள் தீவிர மருத்துவக் கண்காணிப்பில் சிகிச்சை பெறுகின்றனர்.
கொவிட்-19 நோயாளிகளின் உயிரிழப்பு அதிகரித்துள்ள நிலையில் தினமும் 5 சடலங்கள் போதனா மருத்துவமனை சவ அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. யாழ் மாநகர சுகாதார மருத்துவ அதிகாரியின் சீரான ஒழுங்கமைப்பில் தினமும் கொவிட்-19 நோயினால் உயிரிழந்தோரின் சடலங்கள் கோம்பயன் மணல் மயானத்தில் சுகாதார விதிமுறைகளின் கீழ் எரியூட்டப்படுகின்றன
அரச வருமானத்திற்கு பங்களிப்பு செலுத்தும் அரச நிறுவனங
தமிழக மீனவர்களால் வடமராட்சி மீனவர்களின் வலைகள் அறுத்
ஓட்டுமொத்த தோட்டத்தொழிலாளர் சமூகத்தை இலக்காகக் கொண்
களனிதிஸ்ஸ அனல்மின் நிலையத்தின் மின் உற்பத்தி பணிகள் ம
யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நோக்கி பேருந்தில் வர
மத்திய மாகாண ஆளுநர் லலித் யு.கமகே தலவாக்கலை-லிந்துலை ந
நாட்டில் மேலும் 706 பேர் கொரோனா தொற்றாளர்களாக நேற்றைய த
காதலனுக்கு கைவிலங்கிட்டு அவரது காதலியை முழு நிர்வாணம
அரசாங்கத்திற்கு எதிராக அலரி மாளிகைக்கு முன்பாக நடத்த
எமது தாய்நாட்டின் இருப்பு மற்றும் அழகிற்காக சமுத்திர
மலையகப் புகையிரத பாதையில் ஹட்டன் புகையிரத நிலையத்தை அ
இலங்கைக் கடற்பரப்புக்குள் சட்டவிரோதமான முறையில் நுழ
உலக சமாதான தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் இன்றைய
திருகோணமலை கடற்கரைக்கு முன்பாக இன்று (திங்கட்கிழமை) வ
இந்தோனேசியா மற்றும் காம்பியாவில் நூற்றுக்கும் மேற்ப
