நியூசிலாந்து நாட்டின் ஆக்லாந்து நகரில் உள்ள சூப்பர் மார்க்கெட்டுக்குள் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் ஆதரவாளர் நேற்று திடீரென நுழைந்தார். அவர் அங்கிருந்த சிலரை கத்தியால் சரமாரியாக குத்தினார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அவரை சுட்டு வீழ்த்தினர். விசாரணையில், அவர் காவல் துறையினரின் கண்காணிப்பு வளையத்தில் இருந்துவந்தது தற்போது தெரிய வந்துள்ளது.
இதுதொடர்பாக, நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டென் கூறுகையில், கடந்த 2011-ம் ஆண்டு இலங்கையைச் சேர்ந்த அந்த நபர் நியூசிலாந்து வந்தார். பயங்கரவாத கண்காணிப்பு பட்டியலில் அவர் இருந்துள்ளார். ஆக்லாந்து நகர்ப்புற பகுதியில் உள்ள ஷாப்பிங் மாலுக்குச் சென்ற அவர் அங்கிருந்து கத்தியை எடுத்து மக்களை சரமாரியாகத் தாக்கியுள்ளார்.
இதில், 6 பேர் படுகாயம் அடைந்துள்ளார். அவரை கண்காணித்து வந்த காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தினர். காயம் அடைந்தவர்களில் 3 பேர் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. ஐஎஸ் இயக்கத்தால் கவரப்பட்ட அந்த நபர் இந்த வன்முறை செயலில் ஈடுபட்டுள்ளார் என தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலம், ஹூஸ்டன் நகரில் கடந்த 5
வாஷிங்டன்: அமெரிக்காவில் கடந்த நவம்பரில் நடந்த அதிபர்
தென்னாபிரிக்கா வரலாறு காணாத வன்முறை வெறியாட்டங்களை ச
கடந்த ஆண்டில் 70 ஏவுகணை சோதனைகள் நடத்திய வடகொரியா 2023ம
இங்கிலாந்து நாட்டின் வெளியுறவுத்துறை செயலாளராக இருந
டொன்பாஸில் உள்ள ரஷ்ய ஆதரவு பகுதிகள் மீது இராணுவத் தாக
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதை அடுத்து அங்கு
ரஷ்யாவின் புதிய போலிச் செய்திச் சட்டத்தினால் டிக்டொக சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நா ஓட்டோமான் பேரரசு என்பது துருக்கியர்களால் ஆளப்பட்ட ஒர ஆப்கானிஸ்தானில் வன்முறையால் தலிபான்கள் அதிகாரத்தைக் சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நா வவ்வாலில் இருந்து மற்றொரு விலங்கு வழியாக மனிதர்களுக்
