தேர்தல் மற்றும் தேர்தல் முறைமைகள் குறித்த சட்டங்களை மறுசீரமைப்பதற்காகவும், அது தொடர்பான திருத்தங்களை முன்வைப்பதற்காகவும் நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழு நேற்றும் கூடியது.
சபை முதல்வர் தினேஸ்குணவர்தன தலைமையில் குறித்த நாடாளுமன்ற தெரிவுக்குழு நாடாளுமன்ற கட்டட தொகுதியில் நேற்றைய தினம் கூடியிருந்தது.
இதன்போது, ஐக்கிய தேசிய கட்சி, தெரிவுக்குழுவில் முன்னிலையாகி தேர்தல் முறைமை மாற்றம் தொடர்பிலான யோசனைகளை முன்வைத்திருந்தது.
அதேநேரம், மாகாணசபை தேர்தல் முறைமையில் உள்ள குறைப்பாடுகளை கண்டறிந்து அது தொடர்பான தீர்வு மற்றும் பரிந்துரைகளை வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட மூவரடங்கிய குழுவும் தெரிவுக்குழுவில் முன்னிலையாகி பல யோசனைகளை வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தேர்தல் மற்றும் தேர்தல் முறைமைகள் குறித்த சட்டங்களை மறுசீரமைப்பதற்காகவும், அது தொடர்பான திருத்தங்களை முன்வைப்பதற்காகவும் நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழு மீண்டும் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் கூடவுள்ளது.
அன்றைய தினம் ஐக்கிய மக்கள் சக்தி, இலங்கை தமிழரசு கட்சி, தமிழ் முற்போக்கு கூட்டணி, தேசிய மக்கள் சக்தி, எமது மக்கள் சக்தி, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் யோசனைகளை பெற்றுக்கொள்வதற்காக அந்த கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அடுத்த இரண்டு வாரங்களுக்குள் நாட்டில் அரசியல் ஸ்திரத
வவுனியா பல்கலைக்கழகமானது அடுத்து வரும் மூன்று வருட கா
கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் தொடர் குண்டுவெடிப்ப
நாட்டை பழைய நிலைமைக்கு கொண்டுவர 10 வருடங்கள் எடுக்கு
இன்று காலை அம்பாறையின் தமண பகுதியிலுள்ள வீடொன்றில் தா
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மொரட்டுவ பல்கலைக
அதானி குழுமத்தின் தலைவரான கௌதம் அதானியை ஜனாதிபதி கோட்
காணாமல் போன நிலையில் தேடப்பட்டு வந்த, வாழைச்சேனை பொலி
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில்
கொழும்பு நகரின் சில இடங்களை இலக்கு வைத்து குண்டுத்தாக
போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை எடுக்க கோரி ஐந்தம்ச கோ
நான் அச்சப்பட மாட்டேன், மரணிக்கவும் பயமில்லை, முடிந்த
இரத்தினபுரி மாவட்டத்தின் அயகம காவல்துறை பிரிவுக்குட
18 முதல் 25 வயதிற்குட்பட்ட எச்ஐவி நோயாளிகளின் எண்ணிக்கை
கடந்த ஆண்டு இரத்தினபுரியில் கண்டுபிடிக்கப்பட்ட 500 கில
