More forecasts: 30 day weather Orlando

இந்தியா

  • All News
  • தாய்மொழிக்கு முக்கியத்துவம் அளிப்பது அவசியம்- வெங்கையா நாயுடு பேச்சு!
தாய்மொழிக்கு முக்கியத்துவம் அளிப்பது அவசியம்- வெங்கையா நாயுடு பேச்சு!
Sep 09
தாய்மொழிக்கு முக்கியத்துவம் அளிப்பது அவசியம்- வெங்கையா நாயுடு பேச்சு!

ஆந்திரா மாநிலத்தில் உள்ள கிரியா பல்கலைக்கழகத்தில் மானுடவியல் நவீன கல்விக்கான மோட்டூரி சத்தியநாராயணா மையத்தை திறந்துவைக்கும் நிகழ்ச்சியில், சென்னை கிண்டி ராஜ்பவனில் இருந்து ஆன்லைன் வழியாக துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு நேற்று பங்கேற்றார். அந்த மையத்தை திறந்துவைத்து, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேசியதாவது:-



மகாத்மா காந்தியின் தீவிர ஆதரவாளரும், தோழருமான மோட்டூரி சத்யநாராயணா, வாழ்க்கையின் அனைத்து மட்டத்திலும் இந்திய மொழிகளை பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தியவர்களில் முக்கியமானவர் ஆவார். இந்தி மொழியை தென்னிந்தியாவில் பரப்புவதை தமது வாழ்நாளின் முக்கியப் பணியாக கருதி செயல்பட்டு வந்ததுடன், பல்வேறு வெளியீடுகள் மூலம், அவரது தாய்மொழியான தெலுங்கையும் ஊக்குவித்து வந்தார். தெலுங்கு மொழி சமிதியின் நிறுவன செயலாளராகவும் அவர் இருந்தார்.



இந்திய மொழிகளுக்கு உரிய முக்கியத்துவத்தை நாம் அளிக்கவேண்டும். குறிப்பாக, நமது தாய்மொழிக்கு, கல்வி மற்றும் நிர்வாகத்தின் அனைத்து மட்டங்களிலும் முக்கியத்துவம் அளிப்பது அவசியம். நமது கலாச்சார பாரம்பரியத்தில், மொழி ஒரு மிக முக்கியமான அம்சம் என்பதை நாம் எப்போதும் நினைவில் வைத்திருக்கவேண்டும். மொழிதான் நமக்கு அடையாளம், சுயமரியாதையை வழங்குவதோடு, நாம் யார் என்பதையும் வெளிப்படுத்துகிறது. எனவேதான், உங்களது தாய்மொழியில் பேசுவதை பெருமையாகக் கருதுங்கள் என்று நான் அடிக்கடி கூறிவருகிறேன்.



புதிய தேசிய கல்விக்கொள்கை-2020 ஒரு தொலைநோக்கு பார்வை கொண்ட ஆவணம் என்பதோடு, பரவலான கலைக்கு முக்கியத்துவம் அளிப்பதோடு, நவீன காலத்துக்கு ஏற்ப கல்வியில் பன்முக அணுகுமுறையை பின்பற்றுவதிலும் சிறப்பு கவனம் செலுத்துகிறது. இந்திய கல்வி முறையை பிரித்தெடுத்து, ‘தொழில்ரீதியான மற்றும் தாராள கல்வி’ முறைகளுக்கு இடையிலான கடினமான மற்றும் செயற்கைத் தடைகளை தகர்த்தெறிவதே இதன் நோக்கம் ஆகும்.



குழந்தைகளிடம், அவர்களது இளமை பருவத்திலிருந்தே கலை, இலக்கியம் மற்றும் சமூக அறிவியல் பற்றிய ஆர்வத்தை ஏற்படுத்தி ஊக்குவிக்குமாறு பெற்றோர்களை கேட்டுக்கொள்கிறேன். நாட்டிலுள்ள தலைசிறந்த அறிவியல் மற்றும் என்ஜினீயரிங் கல்வி நிறுவனங்களில் சேருவதற்காக, மொழிப்பாடங்கள் மற்றும் சமூக அறிவியல் போன்ற அத்தியாவசியப் பாடங்களை படிப்பதை நாம் புறக்கணித்துவிடுகிறோம்.



இவை தவிர, குருட்டுப்பாடமாக படிப்பது, குழந்தைகளின் படைப்பாற்றலைச் சிதைத்துவிடும். மனிதகுலம் எதிர்கொள்ளும் சவால்களுக்கு புதுமையான தீர்வுகாணக்கூடிய என்ஜினீயரிங், டாக்டர் மற்றும் விஞ்ஞானிகளை உருவாக்கவேண்டும்.



இவ்வாறு அவர் கூறினார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jan01

சபரிமலையில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கான நிலம் கை

Dec29

இந்திய விமான நிறுவனங்கள் இயக்கும் விமானங்களில் இந்தி

Jan01

நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு பிரதமர் உதவி தொகை

Apr30

இந்தியா மற்றும் இலங்கையின் மின் கட்டமைப்பை இணைப்பது த

Mar28

ஆந்திராவில் நடந்த சாலை விபத்தில் 5 பெண்கள் உட்பட 8 தமிழ

Feb23

பஞ்சாப் மாநிலத்தில் போலீஸ் சித்ரவதை வழக்கில் இந்த விவ

Oct23

இலங்கையுடனான கடல் எல்லைக்கு அருகில் உள்ள பாக்கு நீரிண

Feb11

சர்வதேச பயணிகளுக்கான கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை இந

Oct14

குவாட் மற்றும் ஜி-20 போன்ற நிறுவனங்கள் மற்றும் சர்வதேச

Sep28

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் அருகே உள்ள யசோதா நகரை சே

Mar08

அரச பேருந்து ஓட்டுனரை வழிமறித்து தாக்கிய நான்கு பேரை

Jul05

தேனி மாவட்டம் கூடலூரில் 16 வயது சிறுமியை கடத்திச்சென்ற

May26

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த 10-ந

Mar03

தமிழக மக்களின் மனங்களைக் கவரும் வகையில் திமுக தேர்தல்

Mar09

கேரளாவில் நடந்த தீ விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 17 (03:19 am )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Oct 17 (03:19 am )
Testing centres