ரஷ்யாவில் பேரிடர் பயிற்சில் அதனை படம்பிடித்த புகைப்பட பத்திரிகையாளர் மலை உச்சியில் இருந்து தவறி விழும்போது அவரை காப்பாற்ற அங்கிருந்து குதித்த ரஷ்ய பேரிடர் துறை அமைச்சர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ரஷ்ய அவசரகால அமைச்சர் எவ்ஜெனி ஜினிசெவ் தலைமையில் பனி நிறைந்த ஆர்டிக் பகுதியில் கடந்த 2 நாட்களாக பேரிடர் பயிற்சி நடந்து வந்தது. இந்த நிகழ்ச்சியின் புகைப்படங்கள் பல்வேறு ஊடகங்களில் செய்தியாக வெளியிடப்பட்டு வந்தன. இதில் 6,000 பேர் பங்கேற்றனர். இதன் ஒருபகுதியாக கிராஸ்நோயர்ஸ்க் மாகாணத்தின் நாரில்ஸ்க் நகரில் நேற்று பயிற்சி நடந்தது.
அப்போது பயிற்சி ஒத்திகையை புகைப்படம் எடுத்து கொண்டிருந்த புகைப்பட பத்திரிகையாளர் கால் தவறி மலை உச்சியிலிருந்து விழுந்தார். உடனடியாக அவரைக் காப்பாற்றும் முயற்சியில் மலை உச்சியிலிருந்து தண்ணீரில் குதித்த அமைச்சர் எவ்ஜெனி உயிரிழந்தார். இது குறித்து அரசு நிதி உதவியுடன் செயல்படும் ரஷ்யா டைம்ஸ் பத்திரிகையின் தலைமை செய்தி ஆசிரியர் மார்கரீட்டா சிமோன்யான் தனது டிவிட்டரில், ``தண்ணீரில் வெளியே நீட்டிக் கொண்டிருந்த கூரிய முனை கொண்ட பாறையில் தலை மோதியதில் அமைச்சர் எவ்ஜெனி உயிரிழந்தார்,’’என்று பதிவிட்டுள்ளார்.
சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நா
கொலம்பியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றிலிர
இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் சமீப காலமாக த
ஆஸ்திரேலிய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள பாதுகாப்புத்
புதிய சாத்தான்-2 ஹைப்பர்சோனிக் ஏவுகணை மூலம் ஐரோப்பியக
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணம் யுவால்டி நகரில் உள்ள ர
கரீபியன் கடலில் உள்ள தீவு நாடுகளில் ஒன்றான
தென் அமெரிக்க நாடான ஈக்குவாடோரின் – குயாக்வில் நகரி ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான் பயங்கரவாதிகளுக்கும் தொடர்ந்தும் தனிமைப்படுத்தல் உத்தரவினை மீறியமைக்காக கரீபியன் தீவு நாடுகளில் ஒன்று ஹைதி. இதன் தலைநகர் போர்ட இந்தியாவில் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் ரஷ்யப் பகுதிகளை தாக்கி அழிக்கக் கூடிய ராக்கெட் அமைப்ப உலகம் முழுவதும் போர் உள்ளிட்ட காரணங்களால் தங்கள் இருப ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர் ஜாம்பவனான ஷேன் வார்னே மா
