மெக்சிகோ சிட்டி: மெக்சிகோவில் ஒரே நாள் இரவில் மழையும், பூகம்பமும் தாக்கியது. இதில், 18 பேர் பலியாகினர். மெக்சிகோவில் உள்ள அகாபுல்கோ நகரத்தில் உள்ள கடற்கரை பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு பயங்கர பூகம்பம் தாக்கியது. ரிக்டேர் அளவில் 7.1 புள்ளியாக இது பதிவானது.
அகாபுல்கோ நகரத்தில் இருந்து 17 கிமீ தொலைவில் பூகம்பத்தின் மையம் இருந்தது. இதனால், கட்டிடங்கள் குலுங்கின. சில இடங்களில் கட்டிடங்கள் இடிந்தன.
வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மக்கள், குழந்தைகளுடன் அலறியடித்து வெளியே ஓடி வந்து சாலைகளில் பாதுகாப்பாக நின்றனர். இந்த பூகம்பத்தால் கட்டிடங்கள் இடிந்ததில் ஒருவர் பலியானார். ஏராளமானோர் காயமடைந்தனர்.
அதேபோல், டுலா என்ற நகரத்தில் நேற்று முன்தினம் இரவு பெய்த பலத்த மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அங்குள்ள அரசு மருத்துவமனையில் வெள்ளம் புகுந்ததால், அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் நோயாளிகளுக்கு அளிக்கப்பட்டு வந்த ஆக்சிஜன் சப்ளை பழுதாகி நின்று விட்டது. இதனால், ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த 17 நோயாளிகள் பரிதாபமாக இறந்தனர்.
கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்பட
போப் பிரான்சிஸ் (வயது 84) குடல் பிரச்சினையால் அவதிப்பட்
இங்கிலாந்தில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் உச்சம் பெற
உலக அளவில் கொரோனா வைரசால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்
அமெரிக்கா-ஈரான் இடையே அணு ஆயுதவிவகாரத்தில் பிரச்சினை
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் ஆகஸ்டு 31-ம் தே
உக்ரைனின் முக்கிய துறைமுக நகரமான மரியுபோலில் தற்போ
Network உலகின் அடுத்த மைல் கல்லாக 5G Network சேவை கருதப்படுகிறது.
சீனாவின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைர
முதல் உலகப்போர்க்காலத்தில் நடந்ததுபோல, பதுங்கு குழிக
உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில்
சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட
உக்ரைனில் ரஷ்யாவின் சிறப்பு நடவடிக்கை முடிவுக்கு வந்
பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான்கான் அரசுக்கு எதிராக எதி
நைஜர் நாட்டில் செயல்பட்டு வரும் பயங்கரவாத அமைப்புகள்
