பன்வாரிலால் புரோகித் அவர்களை மரியாதையுடன் வழியனுப்பி வைக்கிறோம் என்று தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் புதிய கவர்னராக ரவீந்திர நாராயண ரவி நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று பிறப்பித்துள்ளார்.
ஆர்.என். ரவி தற்போது நாகலாந்து கவர்னராக செயல்பட்டு வருகிறார். இவர் நாளை முதல் தமிழ்நாட்டின் கவர்னராக செயல்பட உள்ளார்.
இதற்கிடையில், தற்போது தமிழ்நாடு கவர்னராக செயல்பட்டு வரும் பன்வாரிலால் புரோகித் பஞ்சாப் மாநில கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் நாளை முதல் பஞ்சாப் கவர்னராக பொறுப்பேற்க உள்ளார்.
இந்நிலையில், பஞ்சாப் மாநில கவர்னராக நியமிக்கப்பட்டுள்ள பன்வாரிலால் புரோகித்திற்கு தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக முதல்-அமைச்சர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ''பஞ்சாப் மாநில ஆளுநராக பொறுப்பேற்க இருக்கும் மாண்புமிகு பன்வாரிலால் புரோகித் அவர்களை அன்புடனும் மரியாதையுடனும் வழியனுப்பி வைக்கிறோம்! தனிப்பட்ட முறையில் என் மீது அன்புடன் பழகியவர் அவர். இனிமையான நட்பு உங்களுடையது. தமிழ்நாடு தங்களை வாழ்த்தி வழியனுப்புகிறது!” என தெரிவித்துள்ளார்.
வடகிழக்கில் பல்வேறு இனக்குழுக்களின் பயங்கரவாதத்தை ம
1980-ம் ஆண்டு மாஸ்கோவில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் தங்க
ஒன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து தற்கொலை செய்பவர்
கர்நாடகத்தில் கொரோனா 2-வது அலை காரணமாக நடப்பு கல்வி ஆண்
பெரியார் பிறந்தநாளான செப்டம்பர் 17ந் தேதி சமூக நீதி நாள
ஜம்மு காஷ்மீரின் ரஜோரி மாவட்டத்தில் துப்பாக்கிகள் உள
கிழக்கு லடாக்கில் பல இடங்களில் எல்லை கோட்டை தாண்டி சீ
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 73-வது பிறந்தநாள் இன
தே.மு.தி.க. நிறுவனத் தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அற
கேரள சட்டசபை தேர்தல், ஏப்ரல் 6-ந் தேதி ஒரே கட்டமாக நடக்க
எதிர்வரும் மே 18ஆம் திகதி இலங்கையில் விடுதலைப் புலிகளி
முஸ்லிம் சகோதரிகளுக்காக நாங்களும் ஹிஜாப் அணிவோம் என த
ஆறு வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த
பீகார் அமைச்சர்கள் அனைவரும் தங்களது சொத்து விவரங்களை
