More forecasts: 30 day weather Orlando

உலகம்

  • All News
  • ஒரே நாளில் அடுத்தடுத்து வட கொரியா - தென் கொரியா ஏவுகணைகளை ஏவி சோதனை!
ஒரே நாளில் அடுத்தடுத்து வட கொரியா - தென் கொரியா ஏவுகணைகளை ஏவி சோதனை!
Sep 16
ஒரே நாளில் அடுத்தடுத்து வட கொரியா - தென் கொரியா ஏவுகணைகளை ஏவி சோதனை!

வடகொரியாவும், தென்கொரியாவும் நேற்று போட்டிப் போட்டு ஏவுகணை சோதனை செய்ததால், கொரிய தீபகற்பத்தில் பதற்றம் நிலவுகிறது. கடந்தாண்டு  அமைதியாக இருந்த வடகொரியா, தற்போது அடுத்தடுத்து ஏவுகணை சோதனைகளை செய்து வருகிறது. கொரோனா அச்சுறுத்தி கொண்டிருந்த நிலையில், ஓராண்டாக அமைதியாக இருந்த அது,   கடந்த மார்ச்சில் 2 ஏவுகணைகளை வானத்தை நோக்கி வீசி சோதனை செய்தது. மேலும், கடந்த ஞாயிறன்று  1,500 தூரத்தில் உள்ள இலக்கை தாக்கும் ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்தது. இதற்கு, அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.



இந்நிலையில், வடகொரியா நேற்று மேலும் 2 கண்டம் விட்டு கண்டம் பாயும்  ஏவுகணைகளை செலுத்தி வெற்றிகரமாக சோதனை செய்தது. மத்திய வடகொரியாவில் இருந்து கொரிய தீபகற்பத்தின் கிழக்கு கடல் பகுதியை நோக்கி இவை செலுத்தப்பட்டன. ஜப்பானின் பொருளாதார கடல் மண்டலத்துக்கு வெளியே இந்த ஏவுகணைகள் தாக்கியதாக ஜப்பான் கடலோர கடல் படை உறுதி செய்துள்ளது. இதற்கும் அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்நிலையில், வடகொரியாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், தென்கொரியாவும் நேற்று கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை வீசி சோதனை செய்தது.



கடந்த மாதம் தென்கொரிய கடற்படையில் சேர்க்கப்பட்ட 3 ஆயிரம் டன் எடை கொண்ட  ‘தோசன் அன் சாங்-ஹோ’ என்ற நீர்மூழ்கி கப்பலில் இருந்து இந்த ஏவுகணை ஏவப்பட்டது. வடகொரியாவும், தென்கொரியாவும் பரம எதிரிகளாக உள்ள நாடுகள். கடந்தாண்டு இவற்றுக்கு இடையே ஒற்றுமை ஏற்பட்டது. பின்னர், மீண்டும் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற நிலையில், இருநாடுகளும் ஒரேநாளில் அடுத்தடுத்து கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை சோதனை செய்திருப்பது, கொரிய தீபகற்பத்தில் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.



உலகில் முதல்முறை

* தென்கொரியா அணு ஆயுத பலமில்லாத நாடு. இப்படிப்பட்ட ஒரு நாடு, கடலுக்கு அடியில் உள்ள நீர்மூழ்கி கப்பலில் இருந்து கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை வீசி சோதனை செய்திருப்பது உலகில் இதுவே முதல்முறை. இந்த சோதனையை தென்கொரிய அதிபர் மூன் ஜே பார்வையிட்டார்.

* நீர்மூழ்கி கப்பலில் இருந்து கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தும் பலத்தை அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரிட்டன், பிரான்ஸ் வடகொரியா, இந்தியா ஆகியவை மட்டுமே பெற்றுள்ளன. தற்போது, இந்த பட்டியலில் தென்கொரியாவும் சேர்ந்துள்ளது.



 






வரவிருக்கும் நிகழ்வுகள்
Jul27

வட ஆப்பிரிக்க நாடான துனிசியாவில் கொரோனா வைரஸ் பாதிப்ப

Jul07

உலகம் முழுவதும் கொரோனா பரவல் மிகப்பெரிய பாதிப்பை ஏற்ப

Mar08

பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள பலுசிஸ

Jan30

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசின் தாக்கம் மலேசி

Apr19

மேற்கு உக்ரைன் நகரில் ரஷிய படைகள் நடத்திய  தாக்குதல்

Mar20

ரஷ்யாவுக்கு உதவுவதற்காக ஆயுதங்கள் ஏந்திய சீன இராணுவ வ

Oct15

வடக்கு துருக்கியின் பார்டின் மாகாணத்தில் நிலக்கரிச்

Sep18

ஐரோப்பிய நாடான இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் (95). இ

Mar05

உக்ரைனுடனான போர் காரணமாக ரஷ்யா மீது பல்வேறு மேற்கத்தி

Mar05

உக்ரைய்ன் மீது குறைவான விமானத் தாக்குதல்கள் இடம்பெற்

May23

சவுதி அரேபியாவில் தற்போது கோவிட் பரவல் தீவிரமடைந்துள

Oct16

ஆப்கானிஸ்தான் நாட்டின் கந்தகாரில் உள்ள இமாம் பர்கா மச

Jul16

கியூபா நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுப்பரவலுக்கு மத்தி

Sep30

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் வசித்து வருபவர் பன்ஸ்

Feb26

ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளிடையே கடுமையான போர் இடம்ப

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jan 15 (22:58 pm )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Jan 15 (22:58 pm )
Testing centres