அதிமுக மாநிலங்களவை உறுப்பினர்களாக இருந்த கே.பி முனுசாமி மற்றும் வைத்திலிங்கம் ஆகியோர் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றதால் தங்களுடைய எம்பிக்கள் பதவியை ராஜினாமா செய்தனர். இதனால் அவ்விரு இடங்களும் காலியானது. அந்த இடங்களுக்கு அக்டோபர் 4ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
திமுக வேட்பாளர்களாக கனிமொழி சோமு மற்றும் ராஜேஷ் குமார் ஆகியோர் களம் இறக்கப்பட்டனர். கடந்த 21ஆம் தேதி தலைமைச் செயலகத்தில் சட்டப் பேரவைச் செயலாளரிடம் இருவரும் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். அவர்களது மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால் கனிமொழி சோமு மற்றும் ராஜேஷ் குமார் ஆகிய இருவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவதாக சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் அறிவித்தார். அவர்களுக்கான வெற்றி சான்றிதழையும் நேற்று வழங்கினார்.
இந்த நிலையில், திமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கனிமொழி சோமுவும் ராஜேஷ்குமாரும் முதல்வர் மு.க ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது முதல்வர் மு.க ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் உடனிருந்தார். அவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
நாட்டின் தேசிய பறவையான மயில் உயிருக்கு போராடிய நிலையி
கொரோான தடுப்பூசிக்கு 35 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்
சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் இன்று பேசிய
நாடு முழுவதும் பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பாதிப 14-வது ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்க காஷ்மீரில் உள்ள ஷோபியன் மாவட்டத்தின் கனிகாம் என்ற பகு உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் பாராஸ் என்ற தனியார் ஆஸ் சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்துக் கோன் ஜெயந்திவிழா
வழக்கு நிலுவையில் இருப்பதால் அதிமுகவின் பொதுச் செயலா கொரோனா வைரஸ் தொற்றால் ஏற்பட்ட உண்மையான இறப்பு எண்ணிக் சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இரு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழக கவர்னராக பன்வா அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டத
