லங்கா IOC நிறுவனம் இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலையை அதிகரிக்க தீர்மானித்துள்ளது.
இதன்படி, ஒரு லீற்றர் டீசலின் விலையை 3 ரூபாவாலும், ஒரு லீற்றர் 92 ரக பெற்றோலின் விலையை 7 ரூபாவாலும் அதிகரிக்கவுள்ளதாக லங்கா IOC நிறுவனம் அறிவித்துள்ளது.
177 ரூபாவாக காணப்பட்ட ஒரு லீற்றர் 92 ரக பெற்றோலின் புதிய விலை 184 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும், 121 ரூபாவாக காணப்பட்ட ஒரு லீற்றர் டீசலின் புதிய விலையாக 124 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பொருளாதார நெருக்கடிக்குள் நாடு சிக்கியுள்ள நிலையில், அதனை கட்டுப்படுத்த வழிகள் இன்று சமகால அரசாங்கம் திணறி வருகிறது.
இந்நிலையில் நாளாந்தம் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் சடுதியாக அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் இன்றைய தினமும் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதனை கட்டுப்படுத்த அரசினால் முடிவில்லை. இதேவேளை கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் போது பெற்றோலின் விலைகள் மிகவும் குறைவான மட்டத்திலேயே பேணப்பட்டு வந்தன.
அப்போதைய எதிர்க்கட்சியான இருந்த சமகால அரசாங்க தரப்பினர், எரிபொருள் விலையேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடாளுமன்றத்திற்கு சைக்கிள் மூலம் சென்றிருந்தனர்.
இதில் சமகால பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உட்பட பல அமைச்சர்களும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நல்லாட்சி அரசாங்க காலத்தில் சஜித் பிரேமதாச 3 பில்லியன
மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்திற்கு மாதாந்தம் 100
முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு வடமாகாண ச
மன்னார் ஊடக நண்பர்களின் பேராதரவுடன் ஊடகவியலாளர் எஸ்.ஜ
கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தும் இறுதி முயற்ச
ஐரோப்பாவுக்குத் தப்பிச் செல்லும் நோக்கில் போலியான
வவுனியா பழையபேருந்து நிலையப்பகுதியில் பணியாறும் விய
இலங்கை இன்று வரலாற்றில் என்றும் இல்லாதவாறு வீழ்ச்சிய
வவுனியாவில் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை சுகாதார பிரி
அனைத்து உயர் தேசிய டிப்ளோமா மாணவர் கூட்டமைப்பால் முன்
யாழில் தனிமைப்படுத்தப்பட்ட மூன்று கிராம சேவகர் பிரிவ
22ஆவது திருத்தத்துக்கு குறைபாடுகளை சுட்டிக்காட்டி ஆதர
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சரும், சபை முதல்வருமான தினே
விகாரைகள் மற்றும் மத ஸ்தலங்களுக்கு மின்சாரத்தை விநிய
மன்னார் கோந்தைப்பிட்டி கடற்பரப்பில் யாழ்ப்பாணத்தை ச
