லங்கா IOC நிறுவனம் இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலையை அதிகரிக்க தீர்மானித்துள்ளது.
இதன்படி, ஒரு லீற்றர் டீசலின் விலையை 3 ரூபாவாலும், ஒரு லீற்றர் 92 ரக பெற்றோலின் விலையை 7 ரூபாவாலும் அதிகரிக்கவுள்ளதாக லங்கா IOC நிறுவனம் அறிவித்துள்ளது.
177 ரூபாவாக காணப்பட்ட ஒரு லீற்றர் 92 ரக பெற்றோலின் புதிய விலை 184 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும், 121 ரூபாவாக காணப்பட்ட ஒரு லீற்றர் டீசலின் புதிய விலையாக 124 ரூபா நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பொருளாதார நெருக்கடிக்குள் நாடு சிக்கியுள்ள நிலையில், அதனை கட்டுப்படுத்த வழிகள் இன்று சமகால அரசாங்கம் திணறி வருகிறது.
இந்நிலையில் நாளாந்தம் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் சடுதியாக அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் இன்றைய தினமும் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதனை கட்டுப்படுத்த அரசினால் முடிவில்லை. இதேவேளை கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் போது பெற்றோலின் விலைகள் மிகவும் குறைவான மட்டத்திலேயே பேணப்பட்டு வந்தன.
அப்போதைய எதிர்க்கட்சியான இருந்த சமகால அரசாங்க தரப்பினர், எரிபொருள் விலையேற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடாளுமன்றத்திற்கு சைக்கிள் மூலம் சென்றிருந்தனர்.
இதில் சமகால பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உட்பட பல அமைச்சர்களும் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கொச்சி கடற்பரப்பில், இலங்கை படகொன்றிலிருந்து சுமார
கொழும்புத் துறைமுக பொருளாதார ஆணைக்குழுவின் ஒழுங்கு வ
அரச மற்றும் தனியார் வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்
கச்சா எண்ணெய் உற்பத்தியை தினசரி 10 இலட்சம் பீப்பாய்க்க
இலங்கை சர்வதேச பிணையங்களுக்கான கொடுப்பனவைச் செலுத்த
மட்டக்களப்பு நகரில் பிச்சைக்கார வேடம் பூண்டு துவிச்ச
சாதாரண தரப் பரீட்சையில் முதற்தடவையிலேயே சித்தியடைந்
கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய கு
கொழும்பில் நாளை முதல் விசேட போக்குவரத்து திட்டம் ஒன்ற
யாழ்ப்பாணம் – நெடுந்தீவு கடற்பரப்பில் கடந்த பெப்ரவர
எதிர்வரும் நாட்களில் மதுபானம் மற்றும் சிகரட்டின் வில
யாப்பாணம் - தென்மராட்சியின், மீசாலை அல்லாரை கிராமத்தி
அமைச்சர் உதய கம்மன்பில நம்பிக்கையில்லா பிரேரணையை எதி
கொழும்பு - கோட்டையில் அமைந்துள்ள ஐக்கிய மக்கள் சக்த
இந்திய மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து யாழ்ப்பாண
