2021 ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் (உ/த) பரீட்சை இன்று காலை 8.30 மணிக்கு நாடு முழுவதும் உள்ள 2,438 பரீட்சை நிலையங்களில் நடைபெறும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி தர்மசேன (L.M.D Dharmasena) தெரிவித்தார்.
நாளைய பரீட்சைக்கு 279,141 பாடசாலை பரீட்சார்த்திகளும், 66,101 தனிப்பட்ட பரீட்சார்த்திகளும் என மொத்தம் 345,242 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளனர்.
இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளான பரீட்சார்த்திகளுக்காகவும், தனிமைப்படுத்தலில் உள்ளவர்களுக்காகவும் மாவட்ட வைத்தியசாலைகளுக்கு அருகாமையில் 29 பரீட்சை நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் கூறியுள்ளார்.
அனைத்து பரீட்சார்த்திகளும் பரீட்சை ஆரம்பிப்பதற்கு அரை மணித்தியாலத்திற்கு முன்னதாகவே பரீட்சை நிலையங்களுக்கு வருகை தந்து தமது பரீட்சை இலக்கங்களுக்கு ஏற்ப ஆசனங்களை அடையாளம் காணுமாறு ஆணையாளர் நாயகம் கேட்டுக்கொண்டுள்ளார்.
பரீட்சார்த்திகள் பரீட்சைக்கு செல்லும்போது, தேசிய அடையாள அட்டை (NIC) மற்றும் பரீட்சை அனுமதி அட்டையை தம்வசம் வைத்திருக்க வேண்டும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் கூறியுள்ளார்.
இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்க
யுத்தத்தினால் உயிர்நீத்தவர்களை நினைவுக்கூறும் உரிமை
அரசியலமைப்பின் 21வது சீர்திருத்தம் நாளை (23) அமைச்சரவையி
"நாங்கள் வங்குரோத்து நிலைக்கு வந்துவிட்டோம் இலங்கை
இலங்கையில் இன அழிப்பு நடைபெற்றது என்று கூறினாலும் அதன
கடந்த காலங்களில் இலங்கைக்கு ஆதரவாக இருந்த நாடுகளும
இலங்கையில் மேலும் 4 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக அ
இந்த மாதத்தில் எந்த நேரத்திலும் எரிபொருள் தட்டுப்பாட
நீர்கொழும்பு நீதிமன்ற வளாகத்திலுள்ள இரு ஊழியர்கள் கொ
நாட்டில் 50 மில்லியன் டொலருக்கும் குறைவான அமெரிக்க டொல
2019 ஆம் ஆண்டு ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்ட வன்முறை மற்று
குளுக்கோமா நோயினால் கண் பார்வை இழக்கும் அபாயம் அதிகம்
இலங்கையில் எதிர்வரும் திங்கட்கிழமை விஷேட வங்கி விடும
கொழும்பு பங்குச் சந்தையில் நேற்றைய தினம் எதிர்பாராத வ
இலங்கையில் நாளைய தினம் அரசாங்கத்தில் மாற்றம் ஏற்படும
