பல நூற்றாண்டுகளாக இருந்ததாக கருதப்படும் மர்மத் தீவு தற்போது மாயமாகி உள்ளது. உலக மேப்களிலும், கூகுள் மேப்பிலும் காட்டப்பட்ட இந்த தீவு, இப்போது உண்மையில் இல்லை என்று கூறப்படுகிறது.
சாண்டி தீவு என்று பெயரிடப்பட்ட தீவு பல ஆண்டுகளாக இருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது இல்லை என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த தீவு1774 ஆம் ஆண்டு முதல் தென் பசிபிக் பகுதியில் நியூ கலிடோனியாவிற்கு அருகில் உள்ளதாக கூறப்படுகின்றது.
சாண்டி தீவை செப்டம்பர் 15, 1774 ஆம் ஆண்டில் கேப்டன் ஜேம்ஸ் குக் என்பவர் ஆஸ்திரேலியாவின் வடகிழக்கு கடற்கரையிலிருந்து கிழக்கு பவளக்கடலின் வரைபடத்தில் சேர்த்தார்.
இந்த தீவு 24 கிமீ நீளமும் 5 கிமீ அகலமும் கொண்டதாக நம்பப்பட்டது. 1800களில் இங்கிலாந்து மற்றும் ஜெர்மனி வரைபடங்களில் இது குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் சில நாட்கள் கழித்து இந்த தீவைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
இதையடுத்து தென் சர்வேயர் என்ற ஆராய்ச்சிக் கப்பலில் இருந்த ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் சாண்டி தீவு இல்லை என்று அறிவித்தனர். இதையடுத்து கேப்டன் குக் இத்தனை ஆண்டுகளுக்கு முன்பு பார்த்ததை 100 சதவீதம் உறுதியாக யாராலும் சொல்ல முடியாது.அந்த தீவு கடல் பியூமிஸ் எனப்படும் மிதக்கும் படிக கற்களாக இருந்திருக்கலாம் என்பது விஞ்ஞானிகளின் கருத்தாக உள்ளது. இவை நீருக்கடியில் எரிமலைகளிலிருந்து வெடித்துச் சிதறி மிதக்கும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு புறநகர் பகுதியான பாணந்துறையில் வைத்தியசாலை
உலக சுகாதார நிறுவனத்தின் ஐரோப்பியப் பிராந்தியத்தி
ரஷியா தொடுத்துள்ள போரை தடுத்து நிறுத்த உலக நாடுகள் நட
ரஷ்ய ராணுவத்திடம் சரணடையாத உக்ரைன் ராணுவ வீரர்களின் க
ரஷ்யா உக்ரைன் இடையே கடுமையான போர் நடைபெற்று வரும் நில
சுமார் 30,000 துருப்புகள் மற்றும் 50 போர்க்கப்பல்களுடன் ரஷ
மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் தனது இளம் ம
ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் சிறப்பு அமர்வில் உக்ரைன் அ
ரஷ்யா - உக்ரைன் மோதல் தொடர்ந்து இன்று 3 ஆவது நாளாக போர் ப
உக்ரைனில் தனது ராணுவ தாக்குதல்களை நிறுத்தினால், ரஷ்யா
ரஷ்ய விமானங்கள், ஹெலிகொப்டர்கள் உக்ரைன் வீரர்களால் வீ
வெளிநாட்டு மாணவர்களுக்கான விசா மூலம் சிங்கப்பூர் வந்
உக்ரைன் மற்றும் ரஷ்யா போர் தற்போது உச்சம் பெற்றுள்ளது
உக்ரைன் மீது ரஷ்யப் படைகள் 7வது நாளாக ஆக்ரோஷமான தாக்கு
மோட்டார் சைக்கிள் வரும் நபர்கள் தங்கச் சங்கிலியை அறுத
