வெளிநாட்டு மாணவர்களுக்கான விசா மூலம் சிங்கப்பூர் வந்த இலங்கை நாட்டவருக்கு ஒரு மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாலியல் ரீதியாகச் சிறுவர்கள் துன்புறுத்தப்படுவதைக் காட்டும் 25 காணொளிகளைத் தமது கைபேசியில் வைத்திருந்த 25 வயதான கொலம்பகே தனுஷ்கா சமாரா பெரேரா என்பவருக்கே இவ்வாறு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் மற்றும் ஒரு இலங்கையரான ஹிண்டாகும்புரே ஷரிந்து தில்ஷன் ராஜபக்சவுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ள நிலையில், அது குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கை நாட்டவர்கள் பலரைக் கொண்ட வாட்ஸ்அப் குழு ஒன்றைத் தாம் தொடங்கியிருப்பதாக கொலம்பகேயிடம் ஷரிந்து தில்ஷன் தெரிவித்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. 2019ஆம் ஆண்டில் தொடங்கிய அந்த வாட்ஸ்அப் குழுவில் கொலம்பகே இணைந்தார்.
சொந்த நாட்டு நிகழ்வுகளைப் பற்றிய தகவல்களைப் பகிர்ந்துகொள்ள அந்த குழு தொடங்கப்பட்டது. ஆனால் நாட்கள் செல்லச் செல்ல ஆபாசக் காணொளிகள் அதில் பகிர்ந்துகொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
வாட்ஸ்அப் குழுவில் ஆபாசக் காணொளிகள் வலம் வருவது தெரிந்தும் கொலம்பகே அதில்இருந்து வெளியேறவில்லை.
ஆபாசக் காணொளிகள் குறித்து விசாரணை நடத்தப்பட்டபோது தமது கைபேசியில் பதிவான ஆபாசப் படங்களை நீக்க முயன்றதை கொலம்பகே ஒப்புக்கொண்டதாக அரச சட்டத்தரணி கூறியுள்ளார்.
உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி பேச்சுவார்த்தைக்கு அழ
ஏ.டி.எம். மற்றும் கிரெடிட் கார்ட் அட்டை வழங்கும் அமெரிக
உக்ரைன் மீது ரஷ்யப் படைகள் 7வது நாளாக ஆக்ரோஷமான தாக்கு
சுவிட்சிலாந்தில் இடம் பெற்ற வாகன விபத்தில் யாழ் இளைஞர
உக்ரைனை ஆக்கிரமிக்க முற்படும் ரஷ்யப் படைகளின் முன்னே
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பைத் தொடர்ந்து உலகம
பாம்புடன் சிறுமி ஒருவர் செல்லமாக கொஞ்சி விளையாடும் வீ
கொள்ளுப்பிட்டியில் உள்ள ஹோட்டல் ஒன்றிற்குள் ஜேர்மனி
உக்ரைனியர்கள் எங்களை தாக்குகிறார்கள், பெண்கள் என்று க
உக்ரைன் - ரஷ்ய மோதல் இலங்கையின் பொருளாதாரத்தை கடுமையா
தற்போது அமெரிக்க அதிபராக தான் இருந்திருந்தால் உக்ரைன
உக்ரைனில் தாக்குதலை நிறுத்திவிட்டு மனிதாபிமான வழித்
உக்ரைன் மீது ரஷ்யாவின் தாக்குதலானது ஒரு மனித சோகம் என
புலம்பெயர் நாட்டில் வாழ்பவர்களனைவரும் மிகவும் சொகுச
ரஷ்ய ராணுவ வீரர் ஒருவரை உக்ரைன் பொதுமக்கள் அடித்து தா
