More forecasts: 30 day weather Orlando

இலங்கை

  • All News
  • நாட்டின் தற்போதைய நெருக்கடியான சூழ்நிலை
நாட்டின் தற்போதைய நெருக்கடியான சூழ்நிலை
Feb 09
நாட்டின் தற்போதைய நெருக்கடியான சூழ்நிலை

நாட்டின் தற்போதைய நெருக்கடிகள் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சபையில் தெரிவித்த கருத்துக்கள் மற்றும் ஆளும் கட்சியின் பிரதம கொரடா அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ  தெரிவித்த பதில் ஆகியவை தொடர்பில் நேற்று சபையில் சர்ச்சை ஏற்பட்டதுடன் அது சில நிமிடங்கள் நீடித்தது.



எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்த கருத்துக்களை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ ''கிசு கிசு''க்கள் என வர்ணித்ததால் ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிக்குமிடையில் சபையில் கடும் தர்க்கம் ஏற்பட்டது.



பாராளுமன்றத்தில் நேற்று எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச 27இன்கீழ் 2இல் மக்களின் வாழ்வாதார நெருக்கடிகள் , நிதிப் பற்றாக்குறை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் நிதி அமைச்சரிடம் பல கேள்விகளை எழுப்பினார்.



அதற்கு பதிலளித்த அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, விரைவில் அதற்கான பதிலை பெற்றுக்கொடுக்க முடியும் என்றும் குறிப்பிட்டார்.



அக்கேள்விகளுக்கு பதிலளிக்க சபையில் நிதி அமைச்சரோ ,நிதி இராஜாங்க அமைச்சரோ இல்லாதால் ஆளும் கட்சியின் பிரதம கொரடாவான அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ பதில் அளித்தார். அதன்போது 27 கீழ் 2 கேள்விகளுக்கு அரசாங்கம் பதிலளிக்கும் எனினும்,எதிர்க்கட்சித்தலைவரின் ''கிசு கிசு''க்களுக்கு பதில் வழங்க முடியாது என்றார்.



அதனையடுத்து எழுந்த எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச ,



மக்களின் வாழ்வாதார நெருக்கடிகள், நாட்டின் நிதிப்பற்றாக்குறை பிரச்சினைகள் அரசுக்கு ''கிசு கிசு''க்களாகிவிட்டனவா? அரசு மக்களின் வாழ்வாதார பிரச்சினைகளை ''கிசு கிசு''க்களாகத்தான் பார்க்கின்றதா எனக்கேள்வி எழுப்பினார்.



அதற்கு அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ பதிலளிக்கையில், எழுத்து மூலம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் வழங்கப்படும். ஏனையவை ''கிசுகிசு''க்களாக இருப்பதால் பதில் வழங்க முடியாது என்றே நான் கூறினேன் என்று குறிப்பிட்டார்.



நான் முக்கியத்துவம் வாய்ந்த கேள்விகளை நிதியமைச்சரிடம் எழுப்பியுள்ளேன் . ஆனால் இக்கேள்விகளுக்கு பதிலளிக்க சபையில் நிதியமைச்சரோ, நிதி இராஜாங்க அமைச்சரோ இல்லை. நாட்டின் மக்களின் பிரச்சினைகள் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளிக்க அமைச்சர்கள் பொறுப்புடன் சபையில் இருக்க வேண்டுமென எதிர்க்கட்சித்தலைவர் தெரிவித்தார்.






வரவிருக்கும் நிகழ்வுகள்
Nov06

ஸ்ரீ தலதா மாளிகை வளாகத்தின், அதி உயர் பாதுகாப்பு வலயமா

Oct05

முல்லைத்தீவில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் கட

Jun15

யாழ் நாவற்குழி கொரோனா இடைத்தங்கல் பராமரிப்பு நிலையம்

Apr30

இலங்கையின் 33ஆவது பொலிஸ்மா அதிபராகக் கடமையாற்றிய மஹிந

Sep27

இலங்கையின் அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால்

Feb14

நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின

Feb09

இலங்கையின் கடற்றொழில் அமைச்சர் வன்முறையை துாண்டும் வ

Mar15

தாயார் உயிரிழந்த நிலையில், சவப்பெட்டி வாங்க பணம் தேடி

May18

நாடாளுமன்றத்தில் கட்டடத் தொகுதியில் நேற்று செய்தி சே

Feb13

பாடசாலை மாணவர்களுக்கு 10 வெளிநாட்டு மொழிகளை கற்பிப்பத

Feb11

சுகாதாரப் பணிப்புறக்கணிப்பின் போது அங்கொட மனநல வைத்த

Oct04

பாடசாலை மாணவர்களில் மேலும் ஒரு மில்லியன் பேருக்கு பாட

Jan23

இலங்கைக்கு விஜயம் மேற்க் கொண்டுள்ள ஐக்கிய இராச்சியத்

Mar15

நாட்டிலுள்ள இந்தப் பிரச்சினைக்குத் தீர்வைப் பெற்றுக

Sep23

தொழிலாளர்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக மஸ்கெலியா

Share News

Sri Lanka

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

     
  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

     
*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Aug 24 (11:26 am )
Testing centres

World

  • Active Cases

    4796

     
  • Total Confirmed

    15024

  • Cured/Discharged

    10183

     
  • Total DEATHS

    45

*change over the previous day
Data Source: Yarlsri.com
Updated: Aug 24 (11:26 am )
Testing centres