சுகாதார அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல்லவுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வி அடைந்துள்ள நிலையில், சுகாதார தொழிற்சங்க ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு இன்று 3ஆவது நாளாகவும் தொடர்கின்றது.
பதவி உயர்வு , இடர்கால கொடுப்பனவு , சம்பள முரண்பாடு உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வை வழங்குமாறு இலங்கை சுகாதார தொழிற்சங்க ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுக்கப்படும் நிலையில், நேற்று சுகாதார அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல்லவுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
இந்த நிலையில் தாதியர், துணை மருத்துவ பணியாளர்கள் மற்றும் மருந்துவ பொருட்கள் விநியோக சேவை ஊழியர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு முடிவு செய்து உள்ளனர்.
கொழும்பில் உள்ள சுகாதார அமைச்சின் அலுவலகத்திற்கு முன்னால் நேற்று ஆர்ப்பாட்டமொன்றையும் முன்னெடுத்தனர்.
இதன் விளைவாக கொழும்பு 07, நகர மண்டபம் பகுதியில் கடுமையான வாகன நெரிசலும் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் உரப் பற்றாக்குறையால் விநியோகஸ்தர்கள் போர
வவுனியாவில் அரசின் பயணத்தடை நடைமுறையை மீறி வவுனியாக்
இலங்கையில் கொரோனா வைரஸ் தீவிரமடைந்து வருகின்றது. பொது
க.பொ.த உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்குமாறு கல்வி அமைச்
வல்வட்டிதுறை பொலிகண்டி கடற்கரை வாடிப்பகுதியில் 217 கில
இலங்கையை திவாலாக்கியவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப
இலங்கையின் சுதந்திர தினமான எதிர்வரும் நான்காம் திக
ராஜபக்ஷக்கள் உகண்டாவிற்கு எடுத்துச் சென்றதாகக் கூறப
வல்வெட்டித்துறையில் இன்று மேலும் 40 பேருக்கு தொற்று உள
குருந்தூர்மலைப் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பா
எதிர்வரும் 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20 ஆம் திகதிக்கு ம
முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு வெளிந
மன்னார் உப்புக்குளம் கோந்தைப்பிட்டி இறங்குதுறையின்
பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திர
பெர்ப்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் அர்
