சுகாதார அமைச்சின் வளாகத்தில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
டெங்கு தடுப்பு உதவியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் இந்த பதற்றம் ஏற்பட்டுள்ளது.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுபவர்கள் சுகாதார அமைச்சிற்குள் நுழைய முயற்சித்து குழப்பம் ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் கலகம் அடக்கும் குழுவினர் சம்பவ இடத்திற்கு வரழைக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளார்கள்.
சம்பள உயர்வு உள்ளிட்ட 7 கோரிக்கைகளை முன்னிறுத்தி 18 சுகாதார சேவைகள் தொழிற்சங்கத்தினர் முன்னெடுத்துள்ள தொடர் பணிப்புறக்கணிப்பு 3 ஆவது நாளாக இன்றும் தொடர்கின்றது.
சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுடன் சுகாதார தொழிற்சங்கங்கள் நேற்று நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் நிறைவடைந்தநிலையில், தமது பணிப்புறக்கணிப்பினை தொடர்ச்சியாக முன்னெடுக்கவுள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.சம்பள பிரச்சினை உள்ளிட்ட 7 கோரிக்கைகளை முன்னிறுத்தி தாதியர்கள், துணை மருத்துவர்கள், பொது சுகாதார உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட 18 சுகாதார தொழிற்சங்கங்கள் இந்த பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளன.
நாட்டின் பொருளாதாரத்தில் மீட்சி ஏற்பட்டதன் பின்னர் வ
யாழ்ப்பாணத்திற்கு வந்த பெருந்தோட்ட அமைச்சர் ரமேஷ் பத
சமூக பாதுகாப்புக்கு பங்களிப்பு வழங்கும் வகையிலான புத
வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு அருகாமையில் உள்ள
சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் பற்றிய அறிவிப்புச் ச
இந்தியாவை வலிந்து சண்டைக்கு இழுக்கும் செயற்பாடுகளை ச
நாட்டு மக்கள் பெரும் நெருக்கடிக்கு மும்கொடுத்துள்ள ந
இலங்கை முழுவதும் தற்போது நடைமுறையில் உள்ள பயணக் கட்டு
ஊரடங்கு அமுல்படுத்தப்பட்ட நிலையில் வவுனியா நகரில் மு
ஜனாதிபதி மாளிகைக்குள் பிரவேசித்த சம்பவத்தில் கைது செ
10 இலட்சம் சைனோபாம் தடுப்பூசிகள் இன்றைய தினம் இலங்கை வந
இந்தியாவின் சீரம் நிறுவனத்திடம் இருந்து தடுப்பூசிகள
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 19 ஆயிரத்து 147 ற்கு மேற்பட்ட இள
கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க வெளியிடப்பட்ட சுகாதார வழி
அமைச்சர்கள் மற்றும் அரச நிறுவனங்களின் செலவுகளை மேலும
