இலங்கைக்கான புதிய அமெரிக்க தூதுவராக ஜூலி சுங் பதவியேற்றுள்ளார்.
இலங்கைக்கான தூதுவராக ஜூலி சுங்கிற்குப் பதவிப் பிரமாணம் செய்து வைப்பதில் பெருமையடைவதாக பிரதி இராஜாங்கச் செயலாளர் வெண்டி ஆர். ஷெர்மன் ட்வீட் செய்துள்ளார்.
சியோலில் பிறந்த ஜூலி சுங் கொரிய, ஜப்பானிய, ஸ்பானிஷ் மற்றும் கெமர் மொழிகளில் சரளமாக பேசக்கூடியவர்.
கம்போடியாவின் புனோம் பென் நகரில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் துணைத் தூதராகவும், தாய்லாந்தின் பேங்காக்கில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் பொருளாதார ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார்.
ஈராக்கின் பாக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் மாற்றம் ஒருங்கிணைப்பாளருக்கான தலைமைப் பணியாளராகவும் இருந்தார். கொலம்பியா, வியட்நாம் மற்றும் ஜப்பானில் உள்ள அமெரிக்க தூதரகங்களிலும், சீனாவின் குவாங்சோவில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகத்திலும் பணியாற்றியுள்ளார்.
கலிபோர்னியா-சான் டியாகோ பல்கலைக்கழகத்தில் தனது இளங்கலை கலைப் பட்டத்தையும், கொலம்பியா பல்கலைக்கழகத்தின் சர்வதேச மற்றும் பொது விவகாரப் பள்ளியில் முதுகலைப் பட்டத்தையும் பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நாட்டில் ஐந்து மாவட்டங்களை சேர்ந்த மேலும் சில கிராம ச
வவுனியா வைரவப்புளியங்குளம் ஆதி விநாயகர் ஆலய வளாகத்தி
கொரோனா தொற்றின் புதிய நோய் அறிகுறியாக ‘கொவிட் டன்’
தற்போது கொவிட்-19 பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், எதிர்
மத்திய வங்கியின் இரண்டாம் பிணைமுறி மோசடி வழக்கில், மு
பாரிய மருந்து தட்டுப்பாடு காரணமாக தனியார் வைத
நாட்டிற்கு பல்வேறு வகையிலும் அச்சுறுத்தலை ஏற்படுத்த
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஊடாகவே தமி
இலங்கை எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடியிலிருந்து
இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சு இன்று கிராமப்புற மற
இலங்கையில் தமிழ் மக்களின் பிரதிநிதிகளான தமிழ்த் தே
உக்ரைன் நாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையினால் இலங்
நயினாதீவு வருடாந்த உற்சவம் செப்டம்பர் 6 ஆம் திகதிக்கு
இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியில் யாழ்ப்பாண நகரின்
பொலிஸ் உத்தரவை மீறி பயணித்த கார் மீது துப்பாக்கிப்ரயோ
