வயதான நீரிழிவு நோயாளிகள் கிரீன் டீ சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா? இனி தெரிஞ்சிட்டு குடிங்க..!
Feb11
வயதான நீரிழிவு நோயாளிகள் கிரீன் டீ சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா? இனி தெரிஞ்சிட்டு குடிங்க..!
‘கிரீன் டீ’ யின் ரகசியமே அதில் அதிக அளவில் உள்ள உயர்தர ‘ஆன்டி ஆக்சிடென்ட்கள்’ தான்.
இதனை நோய் எதிர்ப்பு சக்தி என்கிறோம்.
பழங்கள், காய்கறிகள், கீரைகளில் உள்ளதை விட பல மடங்கு அதிகமாக இதில் இருக்கிறது.
சுருக்கமாக சொன்னால், ஒரு கப் கிரீன் டீ, சில கப் ஆப்பிள் ஜூஸுக்கு சமம். இதனை வயதானவர்கள் கூட அச்சம் இன்றி பருகலாம். நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த பானம்.
இதனை யாரெல்லாம் பருகலாம் அதனால் கிடைக்கும் நன்மைகளையும் தெரிந்து கொள்ளுங்கள்.
கிரீன் டீ யின் நன்மைகள்
ரத்தத்தில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கிறது.
உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது.
உடலில் உள்ள தேவைக்கு அதிகமான கலோரிகளை வேகமாக எரித்து தேவையற்ற கொழுப்பை குறைத்து உடல் எடையை சீராக வைக்க உதவுகிறது.
ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்படுவதை குறைக்கிறது.
இதய நோய்கள் வராமல் தடுக்கிறது.
ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது.
உடலின் திரவ அளவை சமன் செய்து சோம்பலை போக்குகிறது.
புற்று நோய் வராமலும், புற்றுநோய் செல்களை வளர விடாமலும் தடுக்கிறது.
எலும்பில் உள்ள தாதுப்பொருட்களின் அடர்த்தியை அதிகரித்து எலும்பை பலப்படுத்துகிறது.
பற்களில் ஏற்படும் பல் சொத்தையையும், வாய் துர்நாற்றத்தையும் நீக்குகிறது.
நினைவாற்றலை அதிகரிக்கிறது.
சருமத்தை பாதுகாத்து இளமையாக வைக்க உதவுகிறது. பருக்கள் வராமலும் தடுக்கிறது.
வயதானவர்களுக்கு வரும் ஞாபக மறதி மற்றும் நரம்பு சம்பந்தமான நோய்களையும் தடுக்கிறது.
மன அழுத்தத்திற்கும், தலைவலிக்கும் மருந்தாக செயல்படுகிறது.
மூட்டு வாதத்தை குணமாக்க உதவுகிறது.
உடலில் ஏற்படும் புண்கள், காயங்கள் விரைந்து குணமாக உதவுகிறது.