மௌனம் பேசியதே படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் அமீர். அப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் ரசிகர்களை கவர்ந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். அதன்பின் ராம், பருத்திவீரன், ஆதிபகவன் போன்ற படங்களை இயக்கி முன்னணி இயக்குனர்களின் பட்டியலில் இணைந்தார். இவர் யோகி என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். நீண்ட இடைவேளைக்கு பிறகு வெற்றிமாறன் இயக்கிய ’வடசென்னை’ படத்தில் நடித்து பலரின் பாராட்டுக்களையும் பெற்றார்.
சமீபத்தில் அமீர் மீண்டும் இயக்குனர் வெற்றிமாறனுடன் இணைந்து பணியாற்றவுள்ளதாக அறிவிப்பு வெளியானது. இந்த படத்திற்கு இயக்குனர் வெற்றிமாறன் மற்றும் தங்கம் இருவரும் கதை எழுத அமீர் இயக்கவுள்ளார். இந்நிலையில் இப்படத்திற்கு 'இறைவன் மிக பெரியவன்' என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதன் டைட்டில் போஸ்டரை வெளியிட்ட படக்குழு இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் இறைவன் மிக பெரியவன் தலைப்பில் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவம் மூன்று மதத்தின் அடையாளங்களை இடம் பெறச்செய்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
விஜய் தற்போது பீஸ்ட் படத்தில் நடித்து முடித்து அதன் ர
சுதா கொங்கரா இயக்கத்தில் மாதவன் நடித்த இறுதிச்சுற்று
நடிகர் தனுஷ் - ஐஸ்வர்யா தம்பதியின் பிரிவுக்கு உண்மையா
டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளம், தனது அடுத்த வெளியீடாக நடிகை
நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் பத்திரிகையாளர் சந்திப்
நாம் இருவர் நமக்கு இருவர் இந்த சீரியல் ரசிகர்கள் மத
நவரசா என்னும் ஆந்தாலஜி திரைப்படம், மனித உணர்வுளான கோப
தென்னிந்திய திரையுலகின் மிகவும் பிரபலமான நடிகையாக தி
பாகுபலி படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து ராஜமவ
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை
எச். வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் மிகப்பெரிய எத
இயக்குனர் விக்
‘திருடா திருடி’ படம் மூலமாக தமிழில் நடிகையாக அறிமு
நடிகர் வடிவேலுவின் புதிய படமான 'நாய் சேகர் ரிட்டர்ன்
விஜய் தொலைக்காட்சியில் விறுவிறுப்புடன் ஒளிபரப்பாகி
