புத்தளம் - அநுராதபுரம் வீதியில் உள்ள வீட்டில் பெண்ணொருவர் எரிகாயங்களுக்கு உள்ளாகிய நிலையில் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
புத்தளம் - அநுராதபுரம் வீதியில் வசித்து வந்த நெய்னா மரிக்கார் நுஸ்ரத் ஜஹான் என்ற 36 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த பெண்ணுக்கும் அவரது இரண்டாவது கணவருக்கும் சில நாட்களாகச் சண்டை இடம்பெற்று வந்துள்ள நிலையில் நேற்று இரவும் இவ்வாறு இருவருக்குமிடையில் சண்டை இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதேவேளை குறித்த பெண்ணின் இரண்டாவது கணவர் புத்தளம் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
குறித்த வீட்டில் இரத்த கறைகளும் காணப்பட்டதாகவும், குறித்த பெண்ணை இரண்டாவது கணவர் கொலை செய்திருக்கலாமென தாம் சந்தேகிப்பதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த பகுதிக்கு பொலிஸார் மற்றும் தடயவியல் பொலிஸ் பிரிவினர் சென்று பார்வையிட்டதுடன், விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.
கொட்டாஞ்சேனை - பரமானந்தா மாவத்தையில் இடம்பெற்ற துப்பா
கொரோனா தொற்று உறுதியான மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதா
மக்களின் போசாக்கு பிரச்சினைகளை கண்டறிய நாடளாவிய ரீதி
இலங்கையில் சில வர்த்தக வங்கிகளில் இன்றைய தினம் அமெரிக
நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு
சுவிட்சர்லாந்தில் உள்ள அரச அனுமதிபெற்ற பணமாற்று நிறு
போராட்டக்காரர்கள் மற்றும் வேலை நிறுத்தம் செய்பவர்கள
அடுத்த சில மாதங்களில் உணவுப் பாதுகாப்பில் இலங்கை ம
இலங்கையில் அகிம்சை வழியில் உண்ணா நோன்பு இருந்து உயிர்
இலங்கைக்கு வருகை தருபவர்களுக்கான புதிய கொவிட் காப்பு
ஜூன் 14ஆம் திகதி (பொசன் போயா) பொசன் தினத்தை முன்னிட்டு
இலங்கையில் உணவுப் பொதியொன்றின் விலை இன்று முதல் நடைம
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறிய குற்றச்சாட்டில்
வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர் முருகன் ஆலய வருடாந
யாழ். பல்கலைக் கழகத்தின் 36 ஆவது பொதுப்பட்டமளிப்பு விழா
