நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வரும் சூழலில், மடிப்பாக்கத்தில் கொலை செய்யப்பட்ட திமுக வட்டச் செயலாளர் செல்வத்தின் மனைவி சமீனா வெற்றி பெற்றுள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்க ஒரே கட்டமாக கடந்த ஜன.19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது.மாநிலத்தில் சுமார் 60% வாக்குகள் பதிவாகி இருந்த நிலையில், இன்றைய தினம் வாக்குகள் எண்ணப்பட்டுஇதுவரை வெளியான தேர்தல் முடிவுகளில் பெரும்பாலும் திமுக கூட்டணியே வெற்றி பெற்றுள்ளது. குறிப்பாக,
தமிழ்நாட்டில் மொத்தம் இருக்கும் 21 மாநகராட்சிகளையும் திமுக கைப்பற்றியுள்ளது. தலைநகர் சென்னையில் மொத்தம் 200 வார்டுகள் உள்ளது. அதில் இப்போது வரை வெளியான 107 வார்டுகளிலும் திமுகவே வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் மிகப் பெரிய மாநகராட்சியான சென்னை மீண்டும் திமுக வசம் வந்துள்ளது முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.
இதில் திமுக சார்பில் 188ஆவது தொகுதியில் போட்டியிட்ட சமீனா செல்வம் வெற்றி பெற்றுள்ளார். இவரது கணவர் செல்வம், கடந்த பிப். மாதம் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். இதையடுத்து திமுக சார்பில் அவரது கணவர் செல்வம் போட்டியிட இருந்த 188ஆவது வார்டில் சமீனா வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அவர் இந்தத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஆனந்தியை 2,975 வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார்.
கொரோான தடுப்பூசிக்கு 35 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலையி
கொரோனா 2-வது அலையுடன், கருப்பு பூஞ்சை நோயும் நாட்டு மக்
இந்தியாவில் கொரோனா வைரசின் 2ம் அலையின் தாக்கத்தை சமாள
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் திருச்சி மத்திய
தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 23-ந்தேதி கலைவ
அமெரிக்கா ஸ்பெல்லிங் பீ
தமிழகத்தில் சமீபகாலமாக பொறியியல் கல்லூரிகளில் மாணவர
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்
சென்னையில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் முதல்-அமைச்சர் அகில உலகத்துக்கு இந்தியா வழங்கிய பெருங்கொடைகளில் முக இந்தியா மற்றும் இலங்கையின் மின் கட்டமைப்பை இணைப்பது த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கவர்னரை நேரில் சந்தித்து, தாம்பரம் சானடோரியத்தில் உள்ள அரசு நெஞ்ச நோய் மருத்துவ 1990-ம் ஆண்டு காலகட்டத்தில் கவர்ச்சியால் ரசிகர்களை கிறங
