நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வரும் சூழலில், மடிப்பாக்கத்தில் கொலை செய்யப்பட்ட திமுக வட்டச் செயலாளர் செல்வத்தின் மனைவி சமீனா வெற்றி பெற்றுள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்க ஒரே கட்டமாக கடந்த ஜன.19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது.மாநிலத்தில் சுமார் 60% வாக்குகள் பதிவாகி இருந்த நிலையில், இன்றைய தினம் வாக்குகள் எண்ணப்பட்டுஇதுவரை வெளியான தேர்தல் முடிவுகளில் பெரும்பாலும் திமுக கூட்டணியே வெற்றி பெற்றுள்ளது. குறிப்பாக,
தமிழ்நாட்டில் மொத்தம் இருக்கும் 21 மாநகராட்சிகளையும் திமுக கைப்பற்றியுள்ளது. தலைநகர் சென்னையில் மொத்தம் 200 வார்டுகள் உள்ளது. அதில் இப்போது வரை வெளியான 107 வார்டுகளிலும் திமுகவே வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் மிகப் பெரிய மாநகராட்சியான சென்னை மீண்டும் திமுக வசம் வந்துள்ளது முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.
இதில் திமுக சார்பில் 188ஆவது தொகுதியில் போட்டியிட்ட சமீனா செல்வம் வெற்றி பெற்றுள்ளார். இவரது கணவர் செல்வம், கடந்த பிப். மாதம் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். இதையடுத்து திமுக சார்பில் அவரது கணவர் செல்வம் போட்டியிட இருந்த 188ஆவது வார்டில் சமீனா வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அவர் இந்தத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஆனந்தியை 2,975 வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார்.
முதல்-மந்திரி ஹிமந்த விஸ்வ சா்மா குவாஹாட்டியில் செய்த
இளைஞர்கள் இடையே மோதலில் பொறியியல் பட்டதாரி அடித்துக்
இலங்கை அரசால் விடுதலை செய்யப்பட்டு 43 ராமேஸ்வரம் மீனவர
தே.மு.தி.க. தலைவர் கப்டன் விஜயகாந்த் தன்னுடைய கூட்டணி க
திமுகவின் பெரும்புள்ளியான எ.வ. வேலுவின் வீடுகள், அறக்க
சென்னையில் பத்து ரூபாய்க்கு மளிகை கடையில் குளிர்பானம
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் காஷ்மீர் மற்றும் லடாக் யூன
மத்திய சுகாதாரத்துறை மந்திரியை நேரில் சந்திக்க தமிழக
மராட்டிய மாநிலம் பீட் மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண் பூஜ
பர்தா தொடர்பான மேல் முறையீட்டு மனுவை அவசரமாக விசாரிக்
நாட்டையும் அதன் ஒருமைப்பாட்டையும் மதிப்பதாக ஒவ்வொரு
மதுபோதையில் தகராறு செய்ததால் ஆத்திரம் அடைந்த பெண், கொ
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு உச்சத் தை அ
நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் இன்று
டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 41,283 பேருக்கு க
