நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு வரும் சூழலில், மடிப்பாக்கத்தில் கொலை செய்யப்பட்ட திமுக வட்டச் செயலாளர் செல்வத்தின் மனைவி சமீனா வெற்றி பெற்றுள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்க ஒரே கட்டமாக கடந்த ஜன.19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது.மாநிலத்தில் சுமார் 60% வாக்குகள் பதிவாகி இருந்த நிலையில், இன்றைய தினம் வாக்குகள் எண்ணப்பட்டுஇதுவரை வெளியான தேர்தல் முடிவுகளில் பெரும்பாலும் திமுக கூட்டணியே வெற்றி பெற்றுள்ளது. குறிப்பாக,
தமிழ்நாட்டில் மொத்தம் இருக்கும் 21 மாநகராட்சிகளையும் திமுக கைப்பற்றியுள்ளது. தலைநகர் சென்னையில் மொத்தம் 200 வார்டுகள் உள்ளது. அதில் இப்போது வரை வெளியான 107 வார்டுகளிலும் திமுகவே வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் மிகப் பெரிய மாநகராட்சியான சென்னை மீண்டும் திமுக வசம் வந்துள்ளது முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.
இதில் திமுக சார்பில் 188ஆவது தொகுதியில் போட்டியிட்ட சமீனா செல்வம் வெற்றி பெற்றுள்ளார். இவரது கணவர் செல்வம், கடந்த பிப். மாதம் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். இதையடுத்து திமுக சார்பில் அவரது கணவர் செல்வம் போட்டியிட இருந்த 188ஆவது வார்டில் சமீனா வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அவர் இந்தத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஆனந்தியை 2,975 வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார்.
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, சென்னை நொளம்பூர் பகுதியி
நெடுஞ்சாலைத்துறை பொறியாளர்கள் அலுவலகங்களில் குறைபாட
தமிழகத்தில் வெப்ப சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சு
தமிழகத்தில் கொரோனா 3வது அலையை கட்டுப்படுத்த அரசு பல்வ
சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்த 21வயது பெண் கிண்டியில் உ
இந்தியா- இங்கிலாந்து இடையியான 4-வது டெஸ்ட் போட்டி லண்டன
டாய்கேத்தான்-2021 ’ என்ற பெயரில் நடைபெற்ற பொம்மைகள் கண்
70-களின் பின்னணியில் குத்துச்சண்டை விளையாட்டை மையப்பட
மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த இந்து மத தலைவர் காளிச்
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே முன்னாள் முதல்-அமைச்
அதிமுக தேர்தல் பிரச்சாரத்தில் நட்சத்திர பேச்சாளராக ந
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ரஜீவ்காந்தி கொலை வழக்
யூடியூப் சேனலில் தடைசெய்யப்பட்ட பப்ஜி விளையாட்டை விள
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே இந்த ஆண்டு
உத்தரபிரதேச மாநில முன்னாள் முதல்-மந்திரியும், ராஜஸ்தா
