ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அமைப்பு இலங்கையின் தேசிய பாதுகாப்பில் நேரடியாக தலையிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்த தகவலை அரச தரப்பை மேற்கோள்காட்டி தென்னிலங்கை ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது.
தேசிய பாதுகாப்பு தொடர்பான இரகசியங்கள் அடங்கிய உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான அறிக்கையை வெளியிடுமாறு இலங்கை அரசாங்கத்திடம் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட் கோரியுள்ளார்.
பாதுகாப்புக் காரணங்களுக்காக அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச இந்த அறிக்கையை இன்னும் வெளியிடாத நிலையில், அதனை வெளியிடுமாறு ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் கோரியுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து உளவுத்துறை அதிகாரிகள் அளித்த இரகசிய தகவல்கள் அந்த அறிக்கையில் இருப்பதாக கூறப்படுகின்றது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் இந்த அறிக்கையை பகிரங்கப்படுத்துமாறு கோரியதன் மூலம் தேசிய பாதுகாப்பில் நேரடியாக தலையிட்டுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான இறுதி அறிக்கையை அரசாங்கம் தமக்கு வழங்கவில்லை என கொழும்பு பேராயர் மல்கம் ரஞ்சித் அவர்களும் குற்றம் சுமத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
எதிர்காலத்தில் ரஷ்யாவிடம் இருந்து எரிபொருளை பெற்றுக
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை 22ஆம் இலக்க மேல்மாடி விட
இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டு நாணய மாற்று விகி
பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்களுக்கு
சீன தூதரகத்தின் பொருளாதாரம் மற்றும் வணிக பிரிவு, மக்க
80 இலட்சம் ரூபாய் பெறுமதியான ‘குஷ்’ எனப்படும் போதை
யாழ்ப்பாணம் – கொக்குவில் பகுதியில் காவல்துறை, விசேட
மட்டக்களப்பு கிரான் நாகவத்தை கடலில் நண்பர்களுடன் க
எம்மை நெருக்கடிக்குள் தள்ள சூழ்ச்சிகளை சர்வதேசம் முன
நாட்டில் தற்போது நிலவும் அரசியல் மற்றும் பொருளாதார நெ
கேகாலை- எட்டியாந்தோட்டை சுகாதார பிரிவுக்கு உட்பட்ட எட
கொரோனா தடுப்பூசி வழங்குவதற்கான ஒத்திகை நடவடிக்கைகள் (
வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவின் கணக்குச்சூத
கடந்த 30 வருடங்களில் 27 வருடங்கள் வெற்றிகரமாக நடத்திய தொ
தேர்தல் முறைமை மாற்றம் தொடர்பில் முக்கிய மூன்று கட்சி
