உங்களுடைய பைக்கை ரயில் மூலமாகவே வெளியூருக்கு ஈசியா அனுப்பமுடியும். அதற்கான முழு விவரம் மற்றும் விதிமுறைகள் இதுதான் வேலை அல்லது படிப்பு தொடர்பாக பல நேரங்களில் நாம் ஒரு நகரத்திலிருந்து மற்றொரு நகரத்திற்கு மாற வேண்டியிருக்கும்.
அந்த சூழலில் பைக் அல்லது ஸ்கூட்டர்களையும் நம்முடனேயே எடுத்துச் செல்ல வேண்டியிருக்கும். இதற்கு, இந்திய ரயில்வே உங்களுக்கு உதவுகிறது. ரயில் மூலமாக பைக்கை கொரியர் அனுப்புவது சுலபமான ஒன்றுதான். கட்டணமும் குறைவு. ரயிலில் பைக் அல்லது ஸ்கூட்டரை எப்படி அனுப்புவது என்று தெரிந்துகொள்ளுங்கள்.
ரயில்வே விதிமுறை!.
இந்திய ரயில்வே மூலமாக எந்தவொரு பொருளையும் கொண்டு செல்ல முடியும். அதற்கு இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று கையிலேயே எடுத்துச் செல்வது. மற்றொன்று பார்சல். இந்த சேவையில் (பார்சல்) நீங்கள் விரும்பும் இடத்திற்கு பொருட்களை அனுப்ப முடியும். ஆனால் அதனுடன் நீங்கள் பயணிக்க முடியாது.
உங்களுடைய பைக்கை பார்சல் அனுப்ப முதலில் அருகிலுள்ள ரயில் நிலையத்திற்கு செல்ல வேண்டும். அங்கு பார்சல் கவுண்டர் மூலம் பார்சல் தொடர்பான அனைத்து தகவல்களும் உங்களுக்கு கிடைக்கும். தகவல் கிடைத்ததும், அனைத்து ஆவணங்களையும் தயார் செய்ய வேண்டும். ஆவணங்களின் அசல் நகல் மற்றும் புகைப்பட நகல் இரண்டையும் வைத்திருக்க வேண்டும். சரிபார்ப்பின் போது அசல் நகல் தேவைப்படலாம். கடைசியாக பார்சல் செய்வதற்கு முன் உங்களுடைய பைக்கின் டேங்க் சரிபார்க்கப்படும்.
மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் சமீபத்தில் நிகழ
உதயநிதி ஸ்டாலின், தயாநிதி மாறன், தமிழச்சி தங்கபாண்டிய
இந்தியா- இங்கிலாந்து இடையியான 4-வது டெஸ்ட் போட்டி லண்டன
தமிழகத்தில் இனி நிரந்தர ஆட்சியாக திமுக ஆட்சி அமைந்திட
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ஐஸ் போதைப்பொ
இளைஞர்கள் இடையே மோதலில் பொறியியல் பட்டதாரி அடித்துக்
தமிழகம் வரும் இலங்கை தமிழர்களின் பாதுகாப்பு உறுதி செய
கணவரின் வன்கொடுமை தாங்கமுடியாமல் மனைவி 8 வருடமாக சாப்
ராஜஸ்தான் மாநிலத்தில் அசோக் கெலாட் தலைமையில் காங்கிர
நாடு முழுவதும் பள்ளி பொதுத்தேர்வை எதிர்க்கொள்வது குற
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கட்சி தலைமைக்கு எதிர
கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், மத்த
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே இந்த ஆண்டு
கர்நாடகத்தில் முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையில் பா.ஜ
தமிழகத்தின் 14-வது ஆளுநராக மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர
