உங்களுடைய பைக்கை ரயில் மூலமாகவே வெளியூருக்கு ஈசியா அனுப்பமுடியும். அதற்கான முழு விவரம் மற்றும் விதிமுறைகள் இதுதான் வேலை அல்லது படிப்பு தொடர்பாக பல நேரங்களில் நாம் ஒரு நகரத்திலிருந்து மற்றொரு நகரத்திற்கு மாற வேண்டியிருக்கும்.
அந்த சூழலில் பைக் அல்லது ஸ்கூட்டர்களையும் நம்முடனேயே எடுத்துச் செல்ல வேண்டியிருக்கும். இதற்கு, இந்திய ரயில்வே உங்களுக்கு உதவுகிறது. ரயில் மூலமாக பைக்கை கொரியர் அனுப்புவது சுலபமான ஒன்றுதான். கட்டணமும் குறைவு. ரயிலில் பைக் அல்லது ஸ்கூட்டரை எப்படி அனுப்புவது என்று தெரிந்துகொள்ளுங்கள்.
ரயில்வே விதிமுறை!.
இந்திய ரயில்வே மூலமாக எந்தவொரு பொருளையும் கொண்டு செல்ல முடியும். அதற்கு இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று கையிலேயே எடுத்துச் செல்வது. மற்றொன்று பார்சல். இந்த சேவையில் (பார்சல்) நீங்கள் விரும்பும் இடத்திற்கு பொருட்களை அனுப்ப முடியும். ஆனால் அதனுடன் நீங்கள் பயணிக்க முடியாது.
உங்களுடைய பைக்கை பார்சல் அனுப்ப முதலில் அருகிலுள்ள ரயில் நிலையத்திற்கு செல்ல வேண்டும். அங்கு பார்சல் கவுண்டர் மூலம் பார்சல் தொடர்பான அனைத்து தகவல்களும் உங்களுக்கு கிடைக்கும். தகவல் கிடைத்ததும், அனைத்து ஆவணங்களையும் தயார் செய்ய வேண்டும். ஆவணங்களின் அசல் நகல் மற்றும் புகைப்பட நகல் இரண்டையும் வைத்திருக்க வேண்டும். சரிபார்ப்பின் போது அசல் நகல் தேவைப்படலாம். கடைசியாக பார்சல் செய்வதற்கு முன் உங்களுடைய பைக்கின் டேங்க் சரிபார்க்கப்படும்.
தமிழகத்தில் புதிதாக உருவான 9 மாவட்டங்களில் நடக்கும் ஊ
தமிழகத்தில் மேலும் 1,733 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையே இந்த ஆண்டு
இந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண
தூத்துக்குடி மாநகராட்சி தேர்தலையொட்டி, வாக்குச்சாவட
தமிழகத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான
இலங்கை உள்நாட்டு போரின் போது மனித உரிமைகள் மீறப்பட்
காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளரும், சோனியா காந்தி மகளும
இங்கிலாந்தில் கார்ன்வாலில் உள்ள கார்பிஸ் பே கடலோர பகு
முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி போரூரில் பிரசாரத்தை
கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பெங்களூருவ
சென்னை சத்தியமுர்த்தி பவனில் உள்ள 150 அடி உயர கோடி கம்பத
